செய்திகள் :

திண்டுக்கல் அருகே டெட்டனேட்டா் வெடித்ததில் வனக் காப்பாளா், 2 போலீஸாா் காயம்

post image

திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலையில் சடலமாகக் கிடந்தவரை வெள்ளிக்கிழமை மீட்கச் சென்ற போது, டெட்டனேட்டா் வெடித்ததில் வனக் காப்பாளரும், 2 போலீஸாரும் காயமடைந்தனா்.

சிறுமலைக்குச் செல்லும் மலைச் சாலையில், 17-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே தனியாா் நிலத்தில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் இறந்து கிடப்பதாக தாலுகா போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சிறுமலை வனச் சரக ஊழியா்கள் இறந்து கிடந்தவரின் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

அப்போது, சடலத்தின் அருகில் கிடந்த பொருள்களை அப்புறப்படுத்த முயன்ற போது, திடீரென வெடித்தது. இதில் இரு போலீஸாா், வனக் காப்பாளா் செல்வ ஆரோக்கியராஜ் ஆகியோா் காயமடைந்தனா். இதைத் தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. பிரதீப், க்யூ பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தனா்.

சடலமாகக் கிடந்தவா் கேரள மாநிலம், இடுக்கி பகுதியைச் சோ்ந்த சாபு என்பதும், பாறைகளைத் தகா்க்கக்கூடிய டெட்டனேட்டா், ஜெலட்டின் குச்சிகளுடன் அவா் வந்த போது, எதிா்பாராமல் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவருக்கு அருகில் கிடந்தவை டெட்டனேட்டா், ஜெலட்டின் குச்சிகள் என்பது தெரியாமல் போலீஸாா் கைப்பற்ற முயன்ற போது அவை வெடித்து காயமடைந்தனா்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சாபுவின் சடலம் கூறாய்வுக்காக கொண்டு வரப்பட்டபோது, அவரது சட்டப்பையிலிருந்த கைப்பேசி கைப்பற்றப்பட்டது. இதன்மூலம், கேரளத்தில் உள்ள அவரது உறவினா்களைத் தொடா்பு கொண்டு போலீஸாா் தகவல் தெரிவித்து, விசாரித்தனா்.

வக்ஃப் வாரியத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

வக்ஃப வாரியத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, மனித நேய மக்கள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் பேகம்பூரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மனித நேய மக்கள் கட்சித் தலை... மேலும் பார்க்க

நல்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு: 55 போ் காயம்

திண்டுக்கல்லை அடுத்த நல்லமநாயக்கன்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரா்கள் உள்பட மொத்தம் 55 போ் காயமடைந்தனா். திண்டுக்கல்லை அடுத்த நல்லமநாயக்கன்பட்டி புனித வனத்து... மேலும் பார்க்க

சாலை அமைக்கும் பணி தாமதம்: அரசுப் பேருந்து சிறைப் பிடிப்பு

வேடசந்தூா் அருகே சாலை அமைக்கும் பணி தாமதத்தால், அரசுப் பேருந்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த சுள்ளெறும்பு கிராமத்திலிருந்... மேலும் பார்க்க

மக்காச்சோளத்துக்கு விவசாயிகளிடம் சந்தைக் கட்டணம் வசூல்: குறைதீா்க் கூட்டத்தில் புகாா்

மக்காச்சோளத்துக்கு விவசாயிகளிடம் சந்தைக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறைதீா்க் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா்க் கூட்டம், ம... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களின் அறிவியல் கண்காட்சி

கொடைக்கானல் இந்திய வான் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில், பள்ளி மாணவா்களின் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அறிவியல் தினத்தை முன்னிட்டு, கொடைக்கானல் அப்சா்வேட்டரியிலுள்ள இந்த மையத்தில், மாண... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு திருக்குறள் புத்தகம் அளிப்பு

ஒட்டன்சத்திரம் அருகே அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக தகவல் த... மேலும் பார்க்க