செய்திகள் :

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? கட்சிக்குள் தொடரும் குழப்பம்!

post image

பாஜகவின் தேசியத் தலைவரை நியமிக்கும் பணியில் மேலும் தொய்வு ஏற்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

பாஜகவின் தற்போதைய தேசியத் தலைவராக ஜெ.பி. நட்டா பதவி வகிக்கிறார். இவர் 2019 ஆம் ஆண்டில் பாஜகவின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டு, பின்னர் 2020 ஆம் ஆண்டில் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, 2024 வரையில் அவரது பதவி நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், பாஜகவில் ஒரு தலைவர், ஒரு பதவி என்ற கொள்கை இருப்பதால், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் ஜெ.பி. நட்டாவுக்கு தேசியத் தலைவர் பதவியில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளது. மேலும், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில், அவரே தலைவராகத் தொடர்வார்.

பாஜகவின் மாநிலத் தலைவர்களில் 60 சதவிகிதத்தினரின் பதவிக்காலம் முடிவுறும் நிலையில், மொத்தமுள்ள 36 மாநிலங்களில் 12 மாநிலங்களில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இன்னும் 6 மாநிலங்களில் நடத்தப்படவில்லை. இந்த 6 மாநிலங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், பாஜகவின் புதிய தேசியத் தலைவர் குறித்த அறிவிப்பும் வெளிவரும்.

இதையும் படிக்க:கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை: சீமான்

மார்ச் மாத இறுதிக்குள் தேர்வு முடிவு பெறும் என்று அரசியல் வட்டாரங்களில் கூறுகின்றனர். இதனிடையே தமிழ்நாடு, கர்நாடகம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய மாநிலத் தலைவர்களைத் தேர்வு செய்வதிலும் இழுபறி ஏற்பட்டுள்ளதால், இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம், குஜராத் மாநிலங்களில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே பாஜகவின் தேசியத் தலைவரை நியமிப்பதில் அக்கட்சி கவனம் செலுத்தி வருகிறது.

விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் மற்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் இருவரையும் தேசியத் தலைவராக தேர்வு செய்ய பாஜக முயன்றதாகவும், ஆனால் அவர்கள் இருவரும் மறுத்து விட்டதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் மாநில பாஜக தலைவராக அண்ணாமலை தொடர்ந்து நீடிப்பதற்கும், பாஜக மூத்தத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறுகின்றனர்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு!

இந்தியாவின் மொத்த நாட்டு உள்நாட்டு உற்பத்தி அதிகரித்திருப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.கடந்த நிதியாண்டின் (2024 -25) இரண்டாவது காலாண்டில் 5.6 சதவிகிதமாக இருந்த மொத்த உள்... மேலும் பார்க்க

உ.பி.: சூட்கேஸில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

உ.பி.யின் ஜான்பூரில் சூட்கேஸில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் நகர் கோட்வாலி பகுதியில் வாய்க்காலில் வீசப்பட்ட சிவப்பு நிற சூட்கேஸ்... மேலும் பார்க்க

ஐடி ஊழியர் தற்கொலை: நேரலையில் மனைவி மீது குற்றச்சாட்டு!

மனைவி ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாகக் கூறி நேரலையில் பதிவு செய்து ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். உ.பி. மாநிலத்தின் ஆக்ராவில் உள்ள டிஃபன்ஸ் காலனியில் வசிப்பவர் மானவ்... மேலும் பார்க்க

கோவா வரும் சுற்றுலா பயணிகள் குறைந்ததற்கு இட்லி, சாம்பார் தான் காரணம்!

நமது நாட்டின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான கோவாவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கைக் குறைந்ததற்கு இட்லி, சாம்பார், வடா பாவ் மற்றும் உக்ரைன் போர்தான் காரணம் என்று பாஜக எம்எல்ஏ கூறியிருக்கிறார். மேலும் பார்க்க

மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் சூப்பாக்கிச் சூடு; யாருக்கும் காயம் இல்லை

இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மைதேயி மத வழிபாட்டு தலம் அருகிலுள்ள மலைகளில் இருந்து கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மைதேயின் புனிதத் தலமான கோங்பா மருவுக்கு பக... மேலும் பார்க்க

சம்பல் ஜாமா மசூதியை சுத்தம் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜாமா மசூதியை சுத்தம் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பலில் உள்ள ஜாமா மசூதியில் ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவம்... மேலும் பார்க்க