செய்திகள் :

மழையால் கைவிடப்பட்ட போட்டி; ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!

post image

ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டதால், ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

இருவர் அரைசதம்

ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் களமிறங்கினர். ரஹ்மனுல்லா குர்பாஸ் 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன் பின், இப்ராஹிம் ஸத்ரான் மற்றும் செதிக்குல்லா அடல் ஜோடி சேர்ந்தனர். கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய இப்ராஹிம் ஸத்ரான், 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின், ரஹ்மத் ஷா 12 ரன்கள், ஹஸ்மதுல்லா ஷகிதி 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகளை இழந்தபோதிலும், நேர்த்தியாக விளையாடிய செதிக்குல்லா அடல் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 95 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

இதையும் படிக்க: கேப்டன் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக ஜோஸ் பட்லர் அறிவிப்பு!

அதன் பின், களமிறங்கிய அஸ்மதுல்லா ஓமர்ஸாய் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். அவர் ஆஸ்திரேலிய பந்துவீச்சில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டார். சிறப்பாக விளையாடிய அவர் 63 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ரஷித் கான் 19 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களின் முடிவில் 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் பென் துவார்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் ஆடம் ஸாம்பா தலா இரண்டு விக்கெட்டுகளையும், நாதன் எல்லிஸ் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேற்றம்

274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் மேத்யூ ஷார்ட் இருவரும் களமிறங்கினர். தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடியது. மேத்யூ ஷார்ட் 15 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். இதனையடுத்து, டிராவிஸ் ஹெட்டுடன் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். டிராவிஸ் ஹெட் கொடுத்த எளிய கேட்ச்சினை ரஷித் கான் தவறவிட்டார். அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்ட டிராவிஸ் ஹெட் பவுண்டரிகளை விரட்டினார்.

இதையும் படிக்க: பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டது: முன்னாள் கேப்டன்

ஆஸ்திரேலிய அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 109 ரன்கள் எடுத்திருக்கையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால், இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி கைவிடப்பட்டு இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. டிராவிஸ் ஹெட் 59 ரன்களுடனும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்றைய ஆட்டத்தில் வழங்கப்பட்ட ஒரு புள்ளியையும் சேர்த்து 4 புள்ளிகள் பெற்ற ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது என்றே கூறலாம். அரையிறுதிக்கு தகுதி பெற அந்த அணிக்கு மிக மிக அரிதான வாய்ப்பே உள்ளது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக ஜோஸ் பட்லர் அறிவிப்பு!

இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக ஜோஸ் பட்லர் அறிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று முன் தினம் (பிப்ரவரி 26) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டது: முன்னாள் கேப்டன்

பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கான போட்... மேலும் பார்க்க

துபையில் மட்டுமே விளையாடும் இந்திய அணி; நியூசிலாந்து வீரர் கூறுவதென்ன?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிராக துபையில் விளையாடவுள்ள போட்டி குறித்து நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற... மேலும் பார்க்க

இருவர் அசத்தல் அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 274 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டி... மேலும் பார்க்க

கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்; பஞ்சாப் கிங்ஸுக்கு நன்றி தெரிவித்த ஷஷாங் சிங்!

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்களில் ஒருவராக பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங் சிங் இடம்பிடித்துள்ளார்.கடந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஷஷாங் சிங் மிகவும் சிறப்பாக விள... மேலும் பார்க்க

இளம் மிட்செல் ஸ்டார்க்கை பார்த்தமாதிரி இருக்கிறது..! ஐசிசி பகிர்ந்த விடியோ!

ஸ்பென்சர் ஜான்சன் பந்துவீசுவது மிட்செல் ஸ்டார்க் மாதிரி இருப்பதாக ஐசிசி விடியோ வெளியிட்டுள்ளது.சாம்பியன்ஸ் டிராபியின் 10ஆவது போட்டியில் ஆஸி. -ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆப்கன்... மேலும் பார்க்க