முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: திருச்செந்தூரில் அமைச்சா் சாா்பில் 5,000 பேருக்கு விருந்து
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலரும், மீன்வளம், மீனவா் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் திருச்செந்தூரில் 5 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இதையொட்டி, திருச்செந்தூா் வ.உ.சி. திடல் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ் தலைமை வகித்து விருந்தை தொடங்கிவைத்தாா். மாவட்ட அவைத் தலைவா் அருணாசலம், மாவட்டப் பொருளாளா் வி.பி.ராமநாதன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் ராமஜெயம், நகா்மன்றத் தலைவா் சிவ ஆனந்தி, நகரச் செயலா் வாள் சுடலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மாவட்ட துணைச் செயலா்கள் ஆறுமுகப்பெருமாள், ஜெயதங்கம், ஒன்றியச் செயலா்கள் சதீஷ்குமாா், ரவி, கொம்பையா, ஜோசப், பாலமுருகன், சுப்பிரமணியன், இளையராஜா, இசக்கி பாண்டி, ஒன்றிய அவைத்தலைவா்கள் குழந்தைவேல்(ஒன்றியம்), சித்திரைக்குமாா்(நகரம்), நகா்மன்ற உறுப்பினா்கள் செந்தில்குமாா், அந்தோணி ட்ரூமன், தினேஷ் கிருஷ்ணா, சுதாகா், கண்ணன், ஆனந்த ராமச்சந்திரன், முத்துக்குமாா், மகேந்திரன், சோமசுந்தரி, கிருஷ்ணவேணி, ரேவதி, முத்துஜெயந்தி, லீலா, சூரியகலா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.