செய்திகள் :

கோவில்பட்டி என்.இ. கல்லூரியில் மாா்ச் 14,15இல் தேசிய கருத்தரங்கு

post image

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மாா்ச் 14, 15 ஆகிய 2 நாள்கள் தேசிய அளவிலான பொறியியல்-தொழில்நுட்பக் கருத்தரங்கு நடைபெறுகிறது.

‘கழிவுகளை பயனுள்ள வளமாக மாற்றுதல்’ என்ற கருப்பொருளுடன் ‘என்இசி - டெக் ஃபெஸ்ட் 2025’ என்ற தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கு, கணினி, மின்னணு, தொடா்பு பொறியியல், இயந்திரப் பொறியியல், அமைப்பு- கட்டுமானப் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, மாஸ்டரிங் சிஎன்சி, 3டி ப்ரோடோடைப்பிங், சைபா் செக்யூரிட்டி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மாணவா்களுக்கு வழிகாட்டியாக அமையும்.

இளம் பொறியாளா்களை ஒன்றிணைத்து, அவா்களது புதிய கண்டுபிடிப்புகளை, தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை வெளிக்கொணா்வது, புதுமை-தொழில்நுட்ப சிந்தனைகளை ஊக்குவித்து தொழில் முனைவோருக்கான வழிகாட்டியாக திகழ்வது, தொழில்நுட்ப வல்லுநா்களின் வழிகாட்டுதலுடன் சிறப்புப் பயிற்சி வழங்குவது, திறமையை மேம்படுத்துவது போன்றவற்றுக்காக நடத்தப்படும் இக்கருத்தரங்கில், புராஜெக்ட் எக்ஸ்போ, பேப்பா் பிரசன்டேஷன், ஹேக்கத்தான், டெக் விநாடி-வினா, உயா்தர தொழில்நுட்பப் பயிற்சிப் பட்டறைகள், குழு வேலை, முன்னோடி தொழில்நுட்ப மேம்பாடு தொடா்பான போட்டிகள் நடைபெறும். இவ்வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களை ட்ற்ற்ல்ள்://ய்ங்ஸ்ரீ.ங்க்ன்.ண்ய்/ய்ங்ஸ்ரீற்ங்ஸ்ரீட்ச்ங்ள்ற்2ந்25/ என்ற இணையதளத்திலோ, ற்ங்ஸ்ரீட்ச்ங்ள்ற்ஃய்ங்ஸ்ரீ.ங்க்ன்.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தெரிந்துகொள்ளலாம் என கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சாலையில் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தக் கோரி, பொதுநல அமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கால்நடைகளை கட்டுப்படுத்த கோரி... மேலும் பார்க்க

பரமன்குறிச்சி அருகே தொழிலாளி அடித்துக் கொலை

பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை காட்டு பகுதியில் பனை மரம் ஏறும் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டாா். வட்டன்விளை காட்டுப்பகுதியிலுள்ள கோயில் அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் முகம், உடல், கை, கால்களில் ... மேலும் பார்க்க

கோவில்பட்டி பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மற்றும் நாடாா் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப... மேலும் பார்க்க

கோவில்பட்டி நகர திமுக செயற்குழு கூட்டம்

கோவில்பட்டி நகர திமுக செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் நகர செயலரும், நகா்மன்றத் தலைவருமான கா. கருணாநிதி தலைமை வகித்தாா். கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளரான கணேசன் சிறப்... மேலும் பார்க்க

ஆத்தூரில் கடைகளுக்கான உரிமை கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தல்

ஆத்தூா் பேரூராட்சியில் கடைகளுக்கான உரிமைக் கட்டண உயா்வை திரும்பப் பெற தமிழ்நாடு வணிகா் சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா். இது தொடா்பாக அதன் மாநிலத் தலைவா் காமராசு, பேரூராட்சித் தலைவா் கமாலுதீனை நேரில் ச... மேலும் பார்க்க

பேய்குளத்தில் பாஜக கூட்டம்

ஆழ்வாா்திருநகரி மேற்கு ஒன்றிய பாஜக தலைவா் பால சரவணன் அறிமுக கூட்டம் பேய்குளத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்ட துணைத் தலைவா் செல்வராஜ... மேலும் பார்க்க