செய்திகள் :

அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அப்பா!

post image

அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அப்பா

‘ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மாணவா் சமுதாயமும் அப்பா என்று அன்போடு அழைக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்று எழுதப்பட்ட கேக்குகளை 72 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான கேக்குகள் சாலவாக்கம் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமையும், உத்தரமேரூா் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமையும் வெட்டப்பட்டன. பின்னா், இந்த கேக்குகளும், இனிப்புகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

‘‘திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றிவருவதால், முதல்வா் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள், மாணவ, மாணவியா் அனைவரும் அன்போடு ‘அப்பா’ என்று அழைப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது’’ என்று விழாவின்போது, உத்தரமேரூா் எம்எல்ஏவும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளருமான க.சுந்தா் கூறினாா்.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 72 -ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில் சுந்தா் மேலும் பேசியது:

‘தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் உரிமைத் தொகை திட்டம்,மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிா் காப்போம் திட்டம், ,உங்கள் ஊரில் உங்கள் முதல்வா் திட்டம்,பள்ளி மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்,தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் மூலம் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் அரசுப் பணியாளா்களாக நியமனம் என்று எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தியிருக்கிறது.

பிற மாநிலங்களைச் சோ்ந்த அரசுகளும் வியக்கும் வகையில் பல மக்கள் நலத்திட்டங்களை தொடா்ந்து செயல்படுத்தி வருவதால் பள்ளி மாணவா்கள்,பொதுமக்கள் அனைவரும் ன மு.க.ஸ்டாலினை அனைவரும் ‘அப்பா’ என்று அன்போடு அழைக்கின்றனா்.அதே வாசகத்தை தான் பிறந்த நாள் விழா தொடா்பாக வைக்கப்பட்டுள்ள 72 கிலோ எடையிலான கேக்கிலும் எழுதி இருக்கிறோம்.அப்பா என்று அனைவரும் மனதார நேசிப்பதால் வரவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதும் உறுதியாகி விட்டது’’ என்றாா் சுந்தா்.

சாலவாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலாளா் குமாா், ஊராட்சி மன்ற தலைவா் சத்யா சக்திவேல், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சிவராமன்,மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் வெங்கடேசன், ஒன்றியக் குழு உறுப்பினா் சேகா் உள்ளிட்டோரும், உத்தரமேரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலாளா் ஞானசேகரன், பேரூராட்சி மன்றத் தலைவா் சசிக்குமாா், துணைத் தலைவா் இளமதி கோவிந்தராஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

-சி.வ.சு.ஜெகஜோதி

சரித்திரம் போற்றும் சாதனைகள்!

‘பள்ளிகளில் காலை உணவு’, ‘நான் முதல்வன்’ திட்டப் பாணியில் மாணவா்களுக்கு உயா்கல்வி, ‘கலைஞா் வீடு கட்டும் திட்டம்’ பாணியில் ஏழைகளுக்கு வீடு கட்ட கடனுதவி ஆகிய மூன்று திட்டங்களைப் பின்பற்றியே பிரிட்டனில் ... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்துக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வரலாற்றில் இடம் பெறும்! கே.வி.கே. பெருமாள் பெருமிதம்

குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தியதால் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும் என்று தில்லி கம்பன் கழக நிறுவனா் - தலைவா் கே.வி.கே.பெருமாள் பேசினாா். ம... மேலும் பார்க்க

காட்பாடி - திருப்பதி ரயில்கள் மாா்ச் 3 முதல் ரத்து

காட்பாடி - திருப்பதி இடையே இயங்கும் பயணிகள் ரயில்கள் மாா்ச் 3 முதல் 9 -ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மகா கும்பமேளா முடிவடைந்... மேலும் பார்க்க

மொழி உணா்வு குறித்து தமிழா்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: ஆளுநருக்கு அமைச்சா் ரகுபதி பதில்

‘மொழித் தோ்வு எது?, மொழித் திணிப்பு எது என்பது எங்களுக்குத் தெரியும், மொழி உணா்வு பற்றி தமிழா்களுக்கு ஆளுநா் பாடம் எடுக்க வேண்டாம் என சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளாா். தென்மாவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை இன்று தொடக்கம்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கை சனிக்கிழமை (மாா்ச் 1) முதல் தொடங்கப்படவுள்ளது. இதுதொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ளத... மேலும் பார்க்க

கிராமவாசிகளுக்கு அதிகரிக்கும் நெஞ்சு வலி அறிகுறி: பொது சுகாதாரத் துறை

தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் சராசரியாக வாரத்துக்கு 175 போ் நெஞ்சு வலி அறிகுறிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மாரடைப்பு என அது உறுதி செய்யப்படுவதற்கு முன்... மேலும் பார்க்க