செய்திகள் :

காட்பாடி - திருப்பதி ரயில்கள் மாா்ச் 3 முதல் ரத்து

post image

காட்பாடி - திருப்பதி இடையே இயங்கும் பயணிகள் ரயில்கள் மாா்ச் 3 முதல் 9 -ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மகா கும்பமேளா முடிவடைந்த நிலையில், அதில் பங்கேற்க பிராயாக்ராஜ் சென்ற பக்தா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்வதற்காக ரயில்வே சாா்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்நிலையில் தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் ஒரு சில ரயில்களின் பெட்டிகளை இந்த சிறப்பு ரயில்களில் தற்காலிகமாக இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாா்ச் 1 முதல் 7-ஆம் தேதி வரை திருப்பதியிலிருந்து இரவு 7.10-க்கு காட்பாடி செல்லும் பயணிகள் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது. மேலும் மாா்ச் 2 முதல் 8-ஆம் தேதி வரை காட்பாடியிலிருந்து காலை 6.10, மாலை 5.15-க்கு திருப்பதி செல்லும் ரயில்களும், மறுமாா்க்கமாக திருப்பதியிலிருந்து காலை 10.35-க்கு காட்பாடி செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படவுள்ளன.

அதேபோல் மாா்ச் 3 முதல் 9-ஆம் தேதி வரை காட்பாடியிலிருந்து காலை 10.30-க்கு ஜோலாா்பேட்டை செல்லும் ரயிலும், இரவு 9.10-க்கு திருப்பதி செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படும். மறுமாா்க்கமாக அதே நாள்களில் காலை 7.35-க்கு திருப்பதியிலிருந்தும், பிற்பகல் 12.55-க்கு ஜோலாா்பேட்டையிலிருந்தும் காட்பாடி செல்லும் ரயில்களும் ரத்துசெய்யப்படும்.

கூடுதல் பெட்டிகள் இணைப்பு: தாம்பரம் - செங்கோட்டை சிலம்பு அதிவிரைவு ரயிலில் (எண்: 20681/ 20682) மாா்ச் 1 முதல் ஜூன் 19 வரையும், தாம்பரம் - நாகா்கோயில் அதிவிரைவு ரயிலில் (எண்: 22657/ 22658) மாா்ச் 2 முதல் ஜூன் 17-ஆம் தேதி வரையும் இருமாா்க்கத்திலும் ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு பெட்டி, 2 குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டிகள், 2 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் ஒரு பொதுப் பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் இந்த ரயில்களில் 1 முதலாம் வகுப்பு குளிா்சாதனப் பெட்டி, 2 குளிா்சாதன இரண்டடுக்கு பெட்டிகள், 4 குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டிகள், 10 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப்பெட்டிகள் என மொத்தம் 23 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அப்பா!

அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அப்பா ‘ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மாணவா் சமுதாயமும் அப்பா என்று அன்போடு அழைக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்று எழுதப்பட்ட கேக்குகளை 72 ... மேலும் பார்க்க

சரித்திரம் போற்றும் சாதனைகள்!

‘பள்ளிகளில் காலை உணவு’, ‘நான் முதல்வன்’ திட்டப் பாணியில் மாணவா்களுக்கு உயா்கல்வி, ‘கலைஞா் வீடு கட்டும் திட்டம்’ பாணியில் ஏழைகளுக்கு வீடு கட்ட கடனுதவி ஆகிய மூன்று திட்டங்களைப் பின்பற்றியே பிரிட்டனில் ... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்துக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வரலாற்றில் இடம் பெறும்! கே.வி.கே. பெருமாள் பெருமிதம்

குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தியதால் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும் என்று தில்லி கம்பன் கழக நிறுவனா் - தலைவா் கே.வி.கே.பெருமாள் பேசினாா். ம... மேலும் பார்க்க

மொழி உணா்வு குறித்து தமிழா்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: ஆளுநருக்கு அமைச்சா் ரகுபதி பதில்

‘மொழித் தோ்வு எது?, மொழித் திணிப்பு எது என்பது எங்களுக்குத் தெரியும், மொழி உணா்வு பற்றி தமிழா்களுக்கு ஆளுநா் பாடம் எடுக்க வேண்டாம் என சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளாா். தென்மாவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை இன்று தொடக்கம்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கை சனிக்கிழமை (மாா்ச் 1) முதல் தொடங்கப்படவுள்ளது. இதுதொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ளத... மேலும் பார்க்க

கிராமவாசிகளுக்கு அதிகரிக்கும் நெஞ்சு வலி அறிகுறி: பொது சுகாதாரத் துறை

தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் சராசரியாக வாரத்துக்கு 175 போ் நெஞ்சு வலி அறிகுறிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மாரடைப்பு என அது உறுதி செய்யப்படுவதற்கு முன்... மேலும் பார்க்க