செய்திகள் :

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக ஜோஸ் பட்லர் அறிவிப்பு!

post image

இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக ஜோஸ் பட்லர் அறிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று முன் தினம் (பிப்ரவரி 26) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியடைந்ததால், இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறியது.

இதையும் படிக்க: பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டது: முன்னாள் கேப்டன்

ஜோஸ் பட்லர் அறிவிப்பு

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான (ஒருநாள், டி20) போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து ஜோஸ் பட்லர் விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜோஸ் பட்லர் கூறியதாவது: இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகப் போகிறேன். கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதை எனக்கும் அணிக்குமான சரியான முடிவாக இருக்கும். வேறு யாராவது கேப்டன் பொறுப்பினை ஏற்று மெக்கல்லமுடன் இணைந்து செயல்படுவார்கள்.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் எனது கேப்டன் பொறுப்புக்கு முக்கியமானதாக இருந்தது. ஆனால், முடிவுகள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. அதனால், கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதற்கு இதுவே சரியான நேரம் என உணர்ந்தேன் என்றார்.

இதையும் படிக்க: துபையில் மட்டுமே விளையாடும் இந்திய அணி; நியூசிலாந்து வீரர் கூறுவதென்ன?

இங்கிலாந்து அணியின் கேப்டனாக கடந்த ஜூன் 2022 ஆம் ஆண்டு ஜோஸ் பட்லர் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின், இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. இருப்பினும், அண்மைக் காலங்களில் நடைபெற்ற தொடர்களில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்தது. ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் நடப்பு சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்தால் தக்கவைக்க முடியவில்லை.

34 வயதாகும் ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணியை அதன் குரூப் ஸ்டேஜின் கடைசிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக ஒருமுறை கேப்டனாக வழிநடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மழையால் கைவிடப்பட்ட போட்டி; ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!

ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டதால், ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டது: முன்னாள் கேப்டன்

பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கான போட்... மேலும் பார்க்க

துபையில் மட்டுமே விளையாடும் இந்திய அணி; நியூசிலாந்து வீரர் கூறுவதென்ன?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிராக துபையில் விளையாடவுள்ள போட்டி குறித்து நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற... மேலும் பார்க்க

இருவர் அசத்தல் அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 274 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டி... மேலும் பார்க்க

கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்; பஞ்சாப் கிங்ஸுக்கு நன்றி தெரிவித்த ஷஷாங் சிங்!

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்களில் ஒருவராக பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங் சிங் இடம்பிடித்துள்ளார்.கடந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஷஷாங் சிங் மிகவும் சிறப்பாக விள... மேலும் பார்க்க

இளம் மிட்செல் ஸ்டார்க்கை பார்த்தமாதிரி இருக்கிறது..! ஐசிசி பகிர்ந்த விடியோ!

ஸ்பென்சர் ஜான்சன் பந்துவீசுவது மிட்செல் ஸ்டார்க் மாதிரி இருப்பதாக ஐசிசி விடியோ வெளியிட்டுள்ளது.சாம்பியன்ஸ் டிராபியின் 10ஆவது போட்டியில் ஆஸி. -ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆப்கன்... மேலும் பார்க்க