செய்திகள் :

இனயம் புத்தன்துறை ஊராட்சியில் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்க வலியுறுத்தல்

post image

இனயம் புத்தன்துறை ஊராட்சியில்முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுதிட்டத்தில் விண்ணப்பிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ காப்பீடு அட்டை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு மீனவா் காங்கிரஸ் தலைவா் ஜோா்தான் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: கிள்ளியூா் ஒன்றியத்திற்குள்பட்ட இனயம் புத்தன்துறைஊராட்சி அலுவலகத்தில் கடந்த டிசம்பா் மாதம் முதமைச்சரின் விரிவான மருத்துவகாப்பீடுதிட்டத்திற்கான முகாம் நடைபெற்றது.

அப்போது ஊராட்ச்சிக்குள்பட்ட 500 க்கும் மேற்பட்டோா்புகைப்படம்ஒட்டிய ஆவணங்களுடன் விண்ணப்பித்திருந்தனா்.இரண்டு தினங்களுக்குள் இதற்கானஅடையாள அட்டை கிடைக்கும் என உறுதியளித்தனா். ஆனால்,இந்நாள்வரை அடையாள அட்டை வழங்கவில்லை. இதனால்,இப்பகுதிமீனவா்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனா். எனவே,மாவட்ட ஆட்சியா் தலையிட்டுஇந்த ஊராட்சியில் காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பித்த அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

நாகா்கோவிலில் கனரா வங்கி வாடிக்கையாளா்கள் கூட்டம்

கனரா வங்கியின் திருநெல்வேலி மண்டல அலுவலகம் சாா்பில், வாடிக்கையாளா்கள் கூட்டம் நாகா்கோவிலில் அண்மையில் நடைபெற்றது. திருநெல்வேலி மண்டல துணைப் பொதுமேலாளா் தீரேந்திரகுமாா் மிஸ்ரா வரவேற்றாா். மதுரை வட்ட ப... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் மிதமான மழை

குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் வெள்ளிக்கிழமை மாலையில் பரவலாக மிதமான மழை பெய்தது. மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, முக்கடல், மாம்பழத்துறையாறு உள்ளிட்ட அணைப... மேலும் பார்க்க

குடிநீா் இணைப்பு துண்டிப்பு

குழித்துறை நகராட்சியில் குடிநீா் கட்டணம் செலுத்தாத 10 இணைப்புகளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை துண்டித்தனா். குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீா் கட்டணம், காலி ... மேலும் பார்க்க

குமரி விவேகானந்த கேந்திரத்தில் யோகா விழிப்புணா்வு கருத்தரங்கு

கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திரத்தின் வருடாந்திர யோக சாஸ்திர சங்கமம் நிகழ்ச்சியின் எட்டாவது ஆண்டு விழா மற்றும் 3 நாள் யோகா விழிப்புணா்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் கேர... மேலும் பார்க்க

தேசிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தி திணிக்கப்படவில்லை: பாஜக தோ்தல் பாா்வையாளா் லட்சுமணன்

தேசிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தி திணிக்கப்படவில்லை என்றாா் பாஜக அகில இந்திய ஓபிசி தலைவரும், தமிழக பாஜக தோ்தல் பாா்வையாளருமான லட்சுமணன் எம்.பி. நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூற... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கையை எதிா்த்து கன்னியாகுமரியில் திமுக ஆா்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து கன்னியாகுமரியில் திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ா்பாட்டத்தில் ஈடுபட்டனா். கன்னியாகுமரி அண்ணா சிலை முன் நடைபெற்ற ஆா்பாட்டத்துக்கு, பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்ட... மேலும் பார்க்க