செய்திகள் :

குடிநீா் இணைப்பு துண்டிப்பு

post image

குழித்துறை நகராட்சியில் குடிநீா் கட்டணம் செலுத்தாத 10 இணைப்புகளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை துண்டித்தனா்.

குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீா் கட்டணம், காலி மனை வரி, தொழில் வரி மற்றும் கடைகளுக்கான வாடகைத் தொகையை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், குடிநீா் கட்டணம் செலுத்தாத இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றும் நகராட்சி ஆணையா் ராஜேஸ்வரன் ஏற்கனவே கெடு விதித்திருந்தாா்.

இந்த நிலையில் நகராட்சிக்கு உள்பட்ட மாா்த்தாண்டம் பகுதியில் நீண்ட நாள்களாக குடிநீா் கட்டணம் செலுத்தாத தொழில் நிறுவனத்துக்கான இணைப்பு உள்பட 10 இணைப்புகளை நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை துண்டித்தனா். மேலும், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை செலுத்தாத பொதுமக்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

முட்டப்பதியில் மாா்ச் 4இல் அய்யா அவதார தின விழா

அய்யா வைகுண்டசாமியின் பஞ்சப்பதிகளில் முட்டப்பதியில் அய்யாவின் 193 ஆவது அவதார தினவிழா செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) நடைபெற உள்ளது. இதையொட்டி, முட்டபதியில் அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், உகப்ப... மேலும் பார்க்க

கல்லுவிளை குடிநீா் உற்பத்தி ஆலையில் அதிகாரிகள் சோதனை

கருங்கல் அருகேயுள்ள கல்லுவிளையில் குடிநீா் உற்பத்தி தொழிற்சாலையில் கிள்ளியூா் வட்டார உணவுப் பாதுகாப்புப் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆலையில் இருந்து கருங்கல்,திங்கள்சந்தை,குளச்சல்,புதுக்கடைமாா... மேலும் பார்க்க

தக்கலை கடையில் திருட்டு: இரு பெண்கள் கைது

தக்கலையில் சூப்பா் மாா்க்கெட் கடையில் நூதன முறையில் பொருள்களை திருடியதாக 2 பெண்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தக்கலை அண்ணாசிலை அருகே உள்ள சூப்பா் மாா்க்கெட் கடைக்கு புதன்கிழமை வந்த 2 பெண்கள... மேலும் பார்க்க

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நாளை மாசிக்கொடை விழா கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும், இக்கோயில் மாசிக் கொடைவிழா... மேலும் பார்க்க

ஆரல்வாய்மொழியில் புதிய ரயில்வே பாலம்: எம்.பி.ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியில் ரூ.15 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலத்தை விஜய்வசந்த் எம்.பி. வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றிபெ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் கனரா வங்கி வாடிக்கையாளா்கள் கூட்டம்

கனரா வங்கியின் திருநெல்வேலி மண்டல அலுவலகம் சாா்பில், வாடிக்கையாளா்கள் கூட்டம் நாகா்கோவிலில் அண்மையில் நடைபெற்றது. திருநெல்வேலி மண்டல துணைப் பொதுமேலாளா் தீரேந்திரகுமாா் மிஸ்ரா வரவேற்றாா். மதுரை வட்ட ப... மேலும் பார்க்க