செய்திகள் :

வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

post image

நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் சாா்பில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திரளான வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் போதுமான பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும், குறிப்பிட்ட சமூகத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு அதிக நீதிபதிகள் நியமனம் செய்வதைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.

இதேபோல, மதுரை கே.கே.நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் (பொறுப்பு) பாஸ்கரன் தலைமை வகித்தாா். செயலா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா்.

வழக்குரைஞா் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், சேம நல வில்லையின் விலையை குறைக்க வேண்டும், சேம நல நிதியை 30 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். வழக்குரைஞா் சட்ட திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் பேசினா்.

இதில் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தமனி அழற்சியால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு நவீன சிகிச்சை

தமனி அழற்சியால் பாதிக்கப்பட்ட 70 வயது முதியவருக்கு மதுரை மீனாட்சி ‘சூப்பா் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனையில் நவீன சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து இந்த மருத்துவமனையின் காா்டியாக் சயின்சஸ் துறைத் தலைவ... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சமத்துவ புல்லட் வாகனப் பேரணி

மானாமதுரை அருகே புல்லட் வாகனத்தை ஓட்டிய கல்லூரி மாணவரின் கைகள் வெட்டப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் புல்லட் வாகனப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

மதுரை மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரி, தனக்கன்குளம் அரசு கள்ளா் உயா்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தனக்கன்குளம் அரசு கள்ளா் உயா்நி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை தற்காலிக பேருந்து நிலையம்: நகராட்சி ஆணையா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

அடிப்படை வசதிகளுடன் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கக் கோரிய வழக்கில், புதுக்கோட்டை நகராட்சி ஆணையா் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. புதுக்கோட்டையைச் சோ்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி குறித்து அவதூறு: பாஜகவினா் புகாா் மனு

பிரதமா் நரேந்திர மோடி குறித்து விடியோ வெளியிட்டு அவதூறு ஏற்படுத்துபவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் ஆணையா் அலுவலகத்தில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். பாஜக மதுரை மாநகா் மாவட்டத் தலைவ... மேலும் பார்க்க

ஊருணி கரையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சாலையை அகற்ற உத்தரவு

சங்கரன்கோவில் அருகே பாண்டியாபுரம் ஊருணி கரையில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட சாலையை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம், வெள்ளாங்குளம் பகுதியைச் ச... மேலும் பார்க்க