செய்திகள் :

கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை: சீமான்

post image

கைது நடவடிக்கைக்கு பயப்படும் ஆள் நான் கிடையாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இருந்து விமானத்தில் வெள்ளிக்கிழமை சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, வீட்டில் நான் இல்லையென்றால் சம்மனை எனது மனைவியிடம் கொடுத்துவிட்டு சென்றிருக்கலாம். எனக்கு வரும் சம்மனை அனைவரும் படிக்க வேண்டிய அவசியம் இல்லையே. திட்டமிட்டு என்னை அவமானப்படுத்தும் வகையில் கதவில் சம்மனை ஒட்டியுள்ளனர்.

சம்மனை எனக்கு கொடுக்காமல் கதவில் ஒட்டிவிட்டு செல்வது அநாகரிகம். சம்மனை வைத்து சாமி கும்பிடவா முடியும்?. வீரனை வீரத்தால் எதிர்கொள்ள வேண்டும். கைது செய்தவர்களை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். முன்னாள் ராணுவ வீரரான காவலாளி அமல்ராஜையும் காவல் துறை தாக்கியுள்ளது. அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு, சாராயம் வழக்கில் சட்டம் தன் கடமையை செய்ததா?.

காவல் நிலையத்தில் இன்று ஆஜராகிறார் சீமான்!

என்னை சமாளிக்க முடியாத நேரங்களில் பாலியல் புகாரை கையில் எடுக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மட்டும்தான் என் மீது புகார் வருகிறது. அந்த பெண் கொடுத்த புகாரில் முகாந்திரம் இல்லாததால் இபிஎஸ் ஆட்சி காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. விசாரணைக்கு வருவதாக சொன்னேன். இரவு 8 மணிக்கு வருமாறு கூறியது காவல்துறைதான்.

கைது நடவடிக்கைக்கு பயப்படும் ஆள் நான் இல்லை. 15 ஆண்டுகளாக ஒரு பெண்ணை வைத்து என்னையும் என் குடும்பத்தையும் வன்கொடுமை செய்கின்றனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்வியில் தமிழ்நாடு முன்னிலை; சீர்குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு: முதல்வர்

மும்மொழி கொள்கைக்கு எதிரான அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுகவும் பங்கேற்பவிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72 ஆவது பிறந்தநாளையொட்டி, ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ ம... மேலும் பார்க்க

விசாரணைக்கு ஆஜரானார் சீமான்!

நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கு விசாரணைக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஆஜரானார். வழக்கு தொடர்பாக காவல் துறை 2 முறை சம்மன் அனுப்ப... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மாற்றம்!

மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை ஆட்சியரு... மேலும் பார்க்க

மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம்

மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ள் தளப் பதிவில், சீர்காழியில், மூன்றரை... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் மு.க.அழகிரி சந்திப்பு

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அவரது அண்ணன் மு.க.அழகிரி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றது. முதல்வர் ஸ்டா... மேலும் பார்க்க

நிதிப் பகிர்வைக் குறைக்கும் மத்திய அரசு? ராமதாஸ் கண்டனம்!

மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு குறைக்கப்படுவதாக வெளியான தகவல்களையடுத்து, மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதிப் பகிர்வினை 41 சதவிகிதத்திலிருந... மேலும் பார்க்க