செய்திகள் :

அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்: இபிஎஸ்

post image

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் விவகாரம் தொடர்பாக விவாதிக்க மார்ச் 5-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, தவெக உள்பட தமிழகத்தில் உள்ள 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக பட்டியல் வெளியானது.

இதையும் படிக்க : விருப்பமில்லாத பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது போல பேசுகிறார்கள்- சீமான்

இந்த நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான் என்றும், மார்ச் 5-ல் நடைபெறும் கூட்டத்தில் எங்கள் கட்சியின் சார்பில் 2 பேர் பங்கேற்பார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக நாம் தமிழா் கட்சி, புதிய தமிழகம் கட்சி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நிதிப் பகிர்வைக் குறைக்கும் மத்திய அரசு? ராமதாஸ் கண்டனம்!

மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு குறைக்கப்படுவதாக வெளியான தகவல்களையடுத்து, மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதிப் பகிர்வினை 41 சதவிகிதத்திலிருந... மேலும் பார்க்க

'கலெக்டர், எஸ்.பி. நான் சொல்றததான் கேட்கணும்' - தருமபுரி திமுக மாவட்டப் பொறுப்பாளர் பேச்சு

மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., அதற்கு கீழ் உள்ள அத்தனை நிர்வாகமும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என தருமபுரி திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் தர்மசெல்வன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி ... மேலும் பார்க்க

ஆளுநர் தமிழர்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: அமைச்சர் ரகுபதி

ஆளுநர் ரவி தமிழர்களுக்கு மொழியுணர்ச்சியை பற்றி பாடம் எடுக்க வேண்டாம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு பொருளாதாரத்திலும் கல்வியி... மேலும் பார்க்க

திமுக அமைச்சர்களும், மாவட்ட செயலர்களும் குறுநில மன்னர்கள் போல்... இபிஎஸ் குற்றச்சாட்டு

திமுக அமைச்சர்களும், மாவட்ட செயலர்களும் குறுநில மன்னர்கள் போல் செயல்படுகின்றனர் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திமுக தர்மபுரி ... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில்: திரும்பப்பெறப்படும் குழு பயணச்சீட்டுக்கான தள்ளுபடி!

சென்னை மெட்ரோ ரயிலில் வழங்கப்பட்டு வந்த குழு பயணச்சீட்டுக்கான தள்ளுபடிக் கட்டணம் மார்ச் 1 ஆம் தேதி முதல் திரும்பப் பெறப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து சென்னை மெட்ரோ ... மேலும் பார்க்க

தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதல்வர்: அண்ணாமலை

கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக, முதல்வர் ஸ்டாலின் தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.மொழிப் போரில் தமிழ்நாடு போராட... மேலும் பார்க்க