பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டது: முன்னாள் கேப்டன்
ராய்காட் கடற்கரையில் மீன்பிடி படகு தீப்பிடித்தது: 18 பணியாளர்கள் மீட்பு!
மகாராஷ்டிரம் ராய்காட் கடற்கரையில் தீப்பிடித்த மீன்பிடி படகில் இருந்த 18 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் அக்ஷி கடற்கரையில் சுமார் 6 - 7 கடல் மைல் தொலைவில் ராகேஷ் கானுக்குச் சொந்தமான மீன்பிடி படகு வியாழக்கிழமை அதிகாலை தீப்பிடித்தது.
பேரிடர் குறித்த தகவல் கிடைத்ததும், இந்தியக் கடலோர காவல்படை, இந்தியக் கடற்படை விரைவான மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டன.
மும்பையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடலோர காவல்படை கப்பல்கள், மீன்பிடி படகான 190 ப்ராங்ஸ் லெப்டினன்ட் 21இல் தீப்பிடிப்பதைக் கண்டனர்.
இந்த நிலையில், படகிலிருந்த அனைத்து மீனவர்களும் அப்பகுதியில் உள்ள மற்றொரு படகில் இறக்கிவிடப்பட்டது. படகிலிருந்து 18 பணியாளர்களையும் அவர்கள் வெற்றிகரமாக வெளியேற்றினர் இதை ராய்காட் எஸ்பி உறுதிப்படுத்தினார்.