செய்திகள் :

``புதுச்சேரி போலீஸ் லஞ்சம் வாங்கறாங்க… நாங்க நேர்மையா இருக்கோம்'' - ஐஆர்பிஎன் அறிக்கையால் சர்ச்சை

post image

புதுச்சேரியில் இந்தியன் ரிசர்வ் பட்டாலியன் (IRBn) படைப்பிரிவு கடந்த 2005-ம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் தலைமையகம் கோரிமேடு ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. ஐ.ஆர்.பி.என் படைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு நீண்ட காலம் ஆவதால் அதை உள்ளூர் போலீஸுடன் இணைத்து, அவர்களுக்கு கொடுப்பதைப் போலவே பதவி உயர்வு, சம்பளம் ஆகியவை வழங்க வேண்டுமென நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் டி.ஜி.பி ஷாலினி சிங் பிறப்பித்த உத்தரவில், மார்ச் 5-ம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் வரை ரூட் மார்ச் (நடைபயணம்) செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் ஐ.ஆர்.பி.என் அதிகாரிகள் தரப்பிலிருந்து சமூக வலைத்தளங்களில் ஒரு அறிக்கை பகிரப்பட்டு வருகிறது.

புதுச்சேரி போலீஸ்

(இது குறித்து பிப்ரவரி 28-ம் தேதியன்று புதுச்சேரி IRBn: `32 கி.மீ ரூட் மார்ச்’ - ஐ.ஆர்.பி.என் அதிகாரிகளுக்கு கொடுத்தது தண்டனையா... பயிற்சியா? என்ற தலைப்பில் விரிவான கட்டுரை வெளியிட்டிருந்தோம்.)

அந்த அறிக்கையில் புதுச்சேரி போலீஸார் மீது நேரடியாக வைக்கப்பட்டிருக்கும் விமர்சனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக, `லஞ்சம் வாங்கும் புதுச்சேரி போலீஸார் பலர் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். நாங்கள் எங்கள் கடமையை நேர்மையாக செய்து கொண்டிருக்கிறோம். எனவே எங்களுக்கான உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்’ என்ற கருத்துக்கு போலீஸார் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதனால் புதுச்சேரி போலீஸாருக்கும், ஐ.ஆர்.பி.என் பிரிவினருக்கும் மறைமுக பனிப்போர் துவங்கியிருக்கிறது.

``விருந்து சாப்பிடும் மத்திய குழுவினர் மொய் வைப்பதில்லை..'' - குறைதீர் கூட்டத்தில் சாடிய விவசாயி!

தஞ்சாவூர், கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. இதில் விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்... மேலும் பார்க்க

கரூர்: ``இந்த ஒரு ஏரி நிரம்பினால் 50 கிராமங்கள் சிறக்கும்..'' - தீர்வு சொல்லும் மாணவிகள்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கணித அறிவியல் மன்றம் சென்னை மற்றும் அகில இந்திய அறிவியல் கூட்டமைப்பு நியூ டெல்லி ஆகியவை இணைந்து நடத்திய குழந்தைகள் அறிவியல் மாநாடு - 2024 - ம் ஆண்டிற்கான மாநில அளவிலான அறிவ... மேலும் பார்க்க

Doctor Vikatan: 2 வயதுக் குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல்... ஆன்டிபயாட்டிக் பலன் தராதது ஏன்?

Doctor Vikatan: என் குழந்தைக்கு 2 வயதாகப் போகிறது. குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல் வருகிறது. ஒன்றேகால் வயதில் ஒருமுறை யூரினரி இன்ஃபெக்ஷன் வந்து, மருத்துவமனையில் அட்மிட் செய்தோம். ஆன்டிபயாட்டிக் கொடுத்த... மேலும் பார்க்க

Cooking Vessels: அவை வெறும் சமையல் பாத்திரங்கள் அல்ல... நோய் தடுப்பான்கள்! - பாத்திரங்களின் பலன்கள்

மண்சட்டியில் தொடங்கி இரும்பு, செம்பு, வெண்கலம், பித்தளை, ஈயம் போன்ற உலோகப் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிட்டுவந்த காலம் மலையேறிவிட்டது. 'எண்ணெய் சேர்க்காமலேயே சமைக்கலாம். உணவும் பாத்திரத்தில் ஒட்... மேலும் பார்க்க

`அரசியல் முடிவு அவரது தனிப்பட்ட விருப்பம்; அதில் குடும்பத்துக்கு தொடர்பு இல்லை' -ஆதவ் அர்ஜூனா மனைவி

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா சில நாள்களுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருந்தார்.நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் ஆதவ் அர... மேலும் பார்க்க

மதுரை: ``கால்நடை, பிராணி வளர்க்க 50 மடங்கு கூடுதல் கட்டணம் நிர்ணயம்.. ஏன்?'' -கொந்தளிக்கும் மக்கள்

"சைக்கிளுக்கு 50 ரூபா, பைக்கிற்கு 100 ரூபா, காருக்கு 300, லாரிக்கு 500, ரயிலுக்கு 1000, பிளைட்டுக்கு 5000 ரூபா" என்று வைகைப்புயல் வடிவேலு ஒரு திரைப்படத்தில் டோக்கன் போடச்சொல்வது செம காமெடியாக இருக்கும... மேலும் பார்க்க