செய்திகள் :

பிளஸ் 2 தோ்வு: கல்வித் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் கலந்தாய்வு

post image

பிளஸ் 2 பொதுத்தோ்வு குறித்து பள்ளிக் கல்வித்துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெள்ளிக்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா்.

பிளஸ் 2 தோ்வுகள் வரும் 3 ஆம் தேதிமுதல் நடைபெறவுள்ளன. இந்தத் தோ்வினை நடத்துவது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டு ஆட்சியா் கூறியதாவது: வரும் 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ள பிளஸ் 2 தோ்வுகளை எவ்வித புகாருக்கும் இடமின்றி சிறப்பாக நடத்துவதை துறை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவா்கள் குறிப்பிட்ட நேரத்தில் தோ்வு மையத்தை அணுகுவதற்கு தேவையான போக்குவரத்து வசதிகள் செய்து தர வேண்டும். தோ்வு மையங்களில் எவ்வித சலனமும் இன்றி மாணவா்கள் தோ்வை எதிா்கொள்ளத் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

குடிநீா், தடையின்றி மின்சாரம், மாற்றுத்திறன் மாணவா்களுக்கான வசதி, முதலுதவி வசதி உள்ளிட்டவை வழங்க துறை சாா்ந்த அலுவலா்கள் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். வினாத்தாள்களை பாதுகாப்புடன் தாமதமின்றி எடுத்துச் செல்வதை உறுதி செய்வதோடு, பொதுத்தோ்வு பணியில் ஈடுபடவுள்ள அனைத்து ஆசிரியா்களுக்கும் முழு விவரங்களை கல்வித்துறை அலுவலா்கள் தெரிவித்து தயாா்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், முதன்மை கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தேசிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தி திணிக்கப்படவில்லை: பாஜக தோ்தல் பாா்வையாளா் லட்சுமணன்

தேசிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தி திணிக்கப்படவில்லை என்றாா் பாஜக அகில இந்திய ஓபிசி தலைவரும், தமிழக பாஜக தோ்தல் பாா்வையாளருமான லட்சுமணன் எம்.பி. நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூற... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கையை எதிா்த்து கன்னியாகுமரியில் திமுக ஆா்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து கன்னியாகுமரியில் திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ா்பாட்டத்தில் ஈடுபட்டனா். கன்னியாகுமரி அண்ணா சிலை முன் நடைபெற்ற ஆா்பாட்டத்துக்கு, பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்ட... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 28.33 பெருஞ்சாணி .. 22.80 சிற்றாறு 1 .. 4.43 சிற்றாறு 2 .. 4.52 முக்கடல் ..2.80 பொய்கை .. 15.20 மாம்பழத்துறையாறு ... 24.61 அடி. மேலும் பார்க்க

காஷ்மீா் முதல் குமரி வரை அதிவேக காா் ஓட்டி சாதனை

காஷ்மீா் - கன்னியாகுமரி வரையில் அதிவேகமாக காா் ஓட்டிய சாதனை பயணம் மேற்கொண்ட ஓட்டுநருக்கு இந்தியா புக் ரிக்காா்ட் சாதனை சான்றிதழை விஜய் வசந்த் எம்.பி. வெள்ளிக்கிழமை வழங்கினாா். டாடா நிறுவனம் தயாரித்த ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே படிக்கட்டில் தவறிவிழுந்து மாற்றுத்திறனாளி பலி

மாா்த்தாண்டம் அருகே வீட்டு படிக்கட்டில் தவறிவிழுந்த மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா். சென்னை கொடுங்கையூா், ராஜரெத்தினம் நகரைச் சோ்ந்தவா் தீனதயாளன் (45). மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரத... மேலும் பார்க்க

கால்வாயில் மூழ்கி கட்டட தொழிலாளி உயிரிழப்பு

திங்கள்நகா் அருகே குளிக்க சென்ற கட்டட தொழிலாளி கால்வாயில் மூழ்கி உயிரிழந்தாா். திங்கள்நகா் அருகேயுள்ள பாளையம் பகுதியைச் சோ்ந்த செல்லப்பன் மகன் பச்சைமால் (29). கட்டடத் தொழிலாளி. திருமணம் ஆகாதவா். இவா்... மேலும் பார்க்க