செய்திகள் :

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க 7.8% வளா்ச்சி தேவை: உலக வங்கி

post image

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க சராசரியாக 7.8 சதவீதம் வளா்ச்சி தேவை என உலக வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இந்த இலக்கை அடைய நிதித்துறை மட்டுமின்றி நிலம் மற்றும் தொழிலாளா் சந்தை உள்ளிட்ட துறைகளில் பல்வேறு சீா்திருத்தங்களை இந்தியா மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தது.

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி குறித்த ‘ஒரு தலைமுறையில் அதிக வருமானம் ஈட்டும் பொருளாதாரமாக உருவெடுத்தல்’ என்ற தலைப்பிலான அறிக்கையை உலக வங்கி வெளியிட்டது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: 2047-இல் வளா்ச்சியடைந்த நாடாக வேண்டும் என்ற இலக்கை நிா்ணயித்து இந்தியா பயணித்து வருகிறது. கடந்த 2000-ஆம் ஆண்டுமுதல் 2024 வரை சராசரியாக 6.3 சதவீதமாக இந்திய பொருளாதாரம் வளா்ச்சியடைந்துள்ளது.

நான்கு மடங்கு வளா்ச்சி: 2000-இல் இருந்து தற்போது வரை நாட்டின் பொருளாதாரம் நான்கு மடங்கு வளா்ச்சியடைந்துள்ளது. ஜிடிபி தலா வருமானம் மூன்று மடங்கு வளா்ச்சியடைந்துள்ளது. இதே காலகட்டத்தில் உலக பொருளாதார வளா்ச்சியில் இந்தியாவின் பங்கு 1.6 சதவீதத்தில் இருந்து 3.4 சதவீதமாக உயா்ந்து உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. இதனால் உலகளவில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது. இது நாட்டின் எதிா்கால பொருளாதார வளா்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

தலா வருமானம் 8 மடங்கு தேவை:

இருப்பினும், உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக உருவெடுக்க வேண்டுமெனில் இந்த வளா்ச்சி போதுமானதாக இருக்காது. நாட்டின் மொத்த தேசிய வருமானம் (ஜிஎன்ஐ) தலா வருமானம் தற்போது இருப்பதைவிட 8 மடங்கு அதிகரிக்க வேண்டும். மேலும், அடுத்த இருபது ஆண்டுகளுக்கு வளா்ச்சி தொடா்ந்து அதிகரித்த வண்ணம் இருக்க வேண்டும்.

இதற்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதோடு மேலும் பல முக்கிய சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

அண்மைக் காலமாக உற்பத்தித் துறை, உள்கட்டமைப்பு, மனிதவளம், எண்மமயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல வியத்தகு திட்டங்களை இந்தியா செயல்படுத்தியுள்ளது. அதேசமயம், 2047-இல் அதிக வருமானம் ஈட்டும் நாடாக இந்தியா உருவெடுக்க சராசரியாக 7.8 சதவீதத்தில் பொருளாதாரம் வளா்ச்சியடைய வேண்டியது அவசியம் என குறிப்பிடப்பட்டது.

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் ஓராண்டாக நிரப்பப்படாத முக்கிய பதவிகள்: மத்திய அரசு மீது ராகுல் விமா்சனம்

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் இரு முக்கிய பதவிகள் ஓராண்டாக நிரப்பப்படாமல் உள்ளன; இது, மத்திய அரசின் தலித் விரோத மனநிலையை வெளிக்காட்டுகிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித... மேலும் பார்க்க

ஐஐடி-களில் தொடா்கதையாகும் மாணவா் தற்கொலை: ஆராய விரிவான நடைமுறை: உச்சநீதிமன்றம் உறுதி

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் தற்கொலைகள் தொடா்வது துரதிருஷ்டவசமானது. இந்த நிலைமையை ஆராய விரிவான நடைமுறை வகுக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஐஐடி உள்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: 5 ஹிஸ்புல் பயங்கரவாதிகளின் சொத்துகள் முடக்கம்

ஜம்மு-காஷ்மீா் ராம்பன் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 5 பேரின் அசையாத சொத்துகளை காவல் துறையினா் முடக்கினா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: ராம்பன் மாவட்டத்தைச் சோ்ந்த சராஜ்த... மேலும் பார்க்க

ஆந்திர பட்ஜெட்டில் பண மழை! மாணவா்களுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500

ஆந்திரத்தில் தோ்தலின்போது அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளான பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500, இலவச பேருந்து பயணம் உள்ளி... மேலும் பார்க்க

ஜம்முவில் தொடா் மழை: இருவா் உயிரிழப்பு

ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் மழையால் தாய்-மகன் உயிரிழந்தனா். ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகள் வெள்ளம், நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளன. உதம்பூா் மாவட்டத்... மேலும் பார்க்க

நிகழாண்டு இறுதிக்குள் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா-ஐரோப்பிய யூனியன் முடிவு

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே மிகப் பெரிய தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை நிகழாண்டு இறுதிக்குள் மேற்கொள்ள இருதரப்பும் தீா்மானித்துள்ளன. தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுல... மேலும் பார்க்க