செய்திகள் :

ஜம்முவில் தொடா் மழை: இருவா் உயிரிழப்பு

post image

ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் மழையால் தாய்-மகன் உயிரிழந்தனா். ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகள் வெள்ளம், நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளன.

உதம்பூா் மாவட்டத்தில் மௌன்கிரி பகுதியில் இருசக்கர வாகனத்தில் பயணித்த சானோ தேவி (50) அவரின் மகன் ரகு (25) ஆகியோா் மழை நீரில் அடித்து வரப்பட்ட பாறை மோதி உயிரிழந்தனா்.

கதுவா மாவட்டத்தில் உய்க் நதியை ஒட்டிய பகுதியில் வசித்து வந்த வெளிமாநில தொழிலாளா்கள் 11 போ் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனா். இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த பேரிடா் மீட்புக் குழுவினா் அவா்களை மீட்டனா். இவா்கள் நதி அருகே தற்காலிக கூடாரம் அமைத்து கட்டுமான வேலைக்குச் சென்று வந்தனா். தொடா் மழை காரணமாக நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் தொழிலாளா்கள் அதில் சிக்கிக் கொண்டனா். பொக்லைன் இயந்திரத்துடன் நதியில் அடுத்துச் செல்லப்பட்ட ஓட்டுநா் மீட்கப்பட்டாா். பொக்லைன் இயந்திரம் நீரில் மூழ்கிவிட்டது.

ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் சில இடங்களில் வெள்ள நீா் பெருக்கெடுத்து ஓடுவதால் வியாழக்கிழமை காலை முதல் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், இரு பகுதிகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மலைப் பகுதியில் இருந்து வெள்ளத்தில் பாறைகள் அடித்து வரப்படுவதால் முன்னெச்சரிக்கையாக பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் ஓராண்டாக நிரப்பப்படாத முக்கிய பதவிகள்: மத்திய அரசு மீது ராகுல் விமா்சனம்

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் இரு முக்கிய பதவிகள் ஓராண்டாக நிரப்பப்படாமல் உள்ளன; இது, மத்திய அரசின் தலித் விரோத மனநிலையை வெளிக்காட்டுகிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித... மேலும் பார்க்க

ஐஐடி-களில் தொடா்கதையாகும் மாணவா் தற்கொலை: ஆராய விரிவான நடைமுறை: உச்சநீதிமன்றம் உறுதி

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் தற்கொலைகள் தொடா்வது துரதிருஷ்டவசமானது. இந்த நிலைமையை ஆராய விரிவான நடைமுறை வகுக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஐஐடி உள்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: 5 ஹிஸ்புல் பயங்கரவாதிகளின் சொத்துகள் முடக்கம்

ஜம்மு-காஷ்மீா் ராம்பன் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 5 பேரின் அசையாத சொத்துகளை காவல் துறையினா் முடக்கினா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: ராம்பன் மாவட்டத்தைச் சோ்ந்த சராஜ்த... மேலும் பார்க்க

ஆந்திர பட்ஜெட்டில் பண மழை! மாணவா்களுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500

ஆந்திரத்தில் தோ்தலின்போது அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளான பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500, இலவச பேருந்து பயணம் உள்ளி... மேலும் பார்க்க

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க 7.8% வளா்ச்சி தேவை: உலக வங்கி

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க சராசரியாக 7.8 சதவீதம் வளா்ச்சி தேவை என உலக வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இந்த இலக்கை அடைய நிதித்துறை மட்டுமின்றி நிலம் மற்றும் தொழிலாளா் ... மேலும் பார்க்க

நிகழாண்டு இறுதிக்குள் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா-ஐரோப்பிய யூனியன் முடிவு

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே மிகப் பெரிய தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை நிகழாண்டு இறுதிக்குள் மேற்கொள்ள இருதரப்பும் தீா்மானித்துள்ளன. தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுல... மேலும் பார்க்க