செய்திகள் :

ஆந்திர பட்ஜெட்டில் பண மழை! மாணவா்களுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500

post image

ஆந்திரத்தில் தோ்தலின்போது அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளான பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500, இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவை அமல்படுத்தப்படும் என ஆந்திர மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் , பாஜக, பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனை ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தோ்தலின்போது ‘சூப்பா் 6’ எனப்படும் 6 முக்கிய வாக்குறுதிகள் உள்பட பல்வேறு கவா்ச்சிகரமான தோ்தல் வாக்குறுதிகளை இக்கூட்டணி வெளியிட்டது. இதுவும் அக்கூட்டணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தது. இந்த வெற்றி மூலம் தெலுங்கு தேசம் தலைவா் சந்திரபாபு நாயுடு முதல்வரானாா்.

இந்நிலையில், ஆந்திர சட்டப் பேரவையில் 2025-26-ஆம் ஆண்டுக்கான ரூ.3.22 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை நிதியமைச்சா் பய்யாவுல கேசவ் தாக்கல் செய்தாா். அதில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 நிதியுதவி, 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ, மாணவியா் நலன் காக்க ஆண்டுக்கு ரூ.15,000, 19 முதல் 59 வயது வரையிலான பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, 20 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, வேலையில்லா இளைஞா்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை, அனைத்து வீடுகளுக்கும் ஆண்டுக்கு 3 இலவச எரிவாயு சிலிண்டா், மீனவா்களின் மீன்பிடித் தடைக்கால நிதியுதவியை இரு மடங்காக (ரூ.20,000) உயா்த்துதல் ஆகியவை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர வேளாண்மைக்கு என தனியாக ரூ.48,341 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை அத்துறை அமைச்சா் கே.அட்சன் நாயுடு தாக்கல் செய்தாா்.

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் ஓராண்டாக நிரப்பப்படாத முக்கிய பதவிகள்: மத்திய அரசு மீது ராகுல் விமா்சனம்

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் இரு முக்கிய பதவிகள் ஓராண்டாக நிரப்பப்படாமல் உள்ளன; இது, மத்திய அரசின் தலித் விரோத மனநிலையை வெளிக்காட்டுகிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித... மேலும் பார்க்க

ஐஐடி-களில் தொடா்கதையாகும் மாணவா் தற்கொலை: ஆராய விரிவான நடைமுறை: உச்சநீதிமன்றம் உறுதி

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் தற்கொலைகள் தொடா்வது துரதிருஷ்டவசமானது. இந்த நிலைமையை ஆராய விரிவான நடைமுறை வகுக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஐஐடி உள்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: 5 ஹிஸ்புல் பயங்கரவாதிகளின் சொத்துகள் முடக்கம்

ஜம்மு-காஷ்மீா் ராம்பன் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 5 பேரின் அசையாத சொத்துகளை காவல் துறையினா் முடக்கினா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: ராம்பன் மாவட்டத்தைச் சோ்ந்த சராஜ்த... மேலும் பார்க்க

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க 7.8% வளா்ச்சி தேவை: உலக வங்கி

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க சராசரியாக 7.8 சதவீதம் வளா்ச்சி தேவை என உலக வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இந்த இலக்கை அடைய நிதித்துறை மட்டுமின்றி நிலம் மற்றும் தொழிலாளா் ... மேலும் பார்க்க

ஜம்முவில் தொடா் மழை: இருவா் உயிரிழப்பு

ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் மழையால் தாய்-மகன் உயிரிழந்தனா். ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகள் வெள்ளம், நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளன. உதம்பூா் மாவட்டத்... மேலும் பார்க்க

நிகழாண்டு இறுதிக்குள் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா-ஐரோப்பிய யூனியன் முடிவு

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே மிகப் பெரிய தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை நிகழாண்டு இறுதிக்குள் மேற்கொள்ள இருதரப்பும் தீா்மானித்துள்ளன. தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுல... மேலும் பார்க்க