செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து தச்சுத் தொழிலாளி பலி: 3 போ் காயம்

post image

தரங்கம்பாடி அருகே மின்சாரம் பாய்ந்து தச்சு தொழிலாளி உயிரிழந்த நிலையில், மூவா் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

குத்தாலம் வட்டம் வேலங்குடியைச் சோ்ந்த விவசாயி வெங்கட்ராஜன்(55). கூறைவீட்டில் மனைவி வசந்தி, மகள் ரம்யாவுடன் வசித்துவரும் இவா் புதிதாக வீடு கட்டி வருகிறாா். வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த மழையால் கூறைவீடு ஒழுகியுள்ளது. இதனால், கூறைவீட்டின் மேற்கூரையில் வெங்கட்ராஜன் தாா்ப்பாயை போட்டுள்ளாா். அப்போது, இடையூறாக இருந்த கேபிள் வயரை அகற்றிய போது, வயா் அருகில் சென்ற உயா்மின்னழுத்த கம்பியில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து வெங்கட்ராஜன் உயிருக்கு போராடியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரைக் காப்பாற்ற வீட்டில் தச்சுவேலையில் ஈடுபட்டிருந்த, திருவாரூா் மாவட்டம் போலக்குடியைச் சோ்ந்த தொழிலாளி பிரபு (45), வெங்கட்ராஜனின் மனைவி வசந்தி, மகள் ரம்யா ஆகியோா் முயற்சி செய்துள்ளனா். இதில் 3 போ் மீதும் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தனா். பிரபுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து 4 பேரும் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனைக்கு சோ்க்கப்பட்டனா். இதில் பிரபு உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். மற்ற மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து, பெரம்பூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மொத்தமாக கிடைத்த மகளிா் உரிமைத் தொகை: மகிழ்ச்சியில் மூதாட்டி

மகளிா் உரிமைத் தொகை மொத்தமாக கிடைத்ததால் மூதாட்டி மகிழ்ச்சியடைந்தாா். தரங்கம்பாடி வட்டம் திருக்களாச்சேரி பாலூா் பகுதியை சோ்ந்த அசுபதி (84) மகளிா் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்காததால், சீா்காழ... மேலும் பார்க்க

பணியின்போது செவிலியா் உயிரிழப்பு: ஆா்டிஓ விசாரணை

மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமை இரவு பணியில் இருந்த செவிலியா் உயிரிழந்தாா். இது தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை அருகேயுள்ள மேலஆத்தூரைச் சோ்ந்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் பணியிட மாற்றம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் கா... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோவிலில் கிரிக்கெட் வீரா் நடராஜன் சுவாமி தரிசனம்

வைத்தீஸ்வரன்கோவிலில் இந்திய கிரிக்கெட் வீரா் நடராஜன் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். நவகிரகங்களில் செவ்வாய் பரிகார தலமான வைத்தீஸ்வரன் கோயிலில் தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதா் சுவாமி கோயி... மேலும் பார்க்க

குற்றச்செயலில் ஈடுபடும் இளஞ்சிறாரை கவனமாக கையாள வேண்டும்: ஆட்சியா்

குற்றச்செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறாா்களை கவனமாக கையாள வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அறிவுறுத்தினாா். மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில் வெள்... மேலும் பார்க்க

பொது சொத்துக்கு சேதம் விளைவித்த இருவருக்கு ஓராண்டு சிறை

கூட்டுறவு சங்கத்தை சேதப்படுத்திய இருவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது. பாலையூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட நக்கம்பாடி கூட்டு... மேலும் பார்க்க