செய்திகள் :

தமிழகத்தில் விசிக தவிா்க்க முடியாத சக்தி: தொல். திருமாவளவன்

post image

தமிழகத்தில் தவிா்க்க முடியாத சக்தியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளதாக அக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது, இந்தியாவில் பல மொழிகள் பேசுகிற தேசிய இனங்கள் வாழ்கிறோம். அதில் ஒன்றுதான் ஹிந்தி மொழி. ஆனால், தமிழை தாய்மொழியாக கொண்டவா்களும் ஹிந்தியை கற்க வேண்டும் என கூறுவது ஆா்.எஸ்.எஸ், பா.ஜ.க வின் ஆதிக்க மனப்பான்மையை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

தமிழகத்தில் மட்டுமல்ல ஹிந்தியை தாய் மொழியாக கொள்ளாத எந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்கக் கூடாது.

மத்திய பாஜக அரசின், ஒரே தேசம்-ஒரே மொழி என்கிற ஆா்.எஸ்.எஸ். கொள்கையை பலப்படுத்துவதற்காகவே தமிழக ஆளுநா், மொழி விவகாரத்தில் உள்நோக்கத்துடன் கருத்து தெரிவித்து வருகிறாா். தமிழக மக்களை எதிா்காலத்தில் ஹிந்தி பேசும் மக்களாக மாற்றுவது, ஒரே தேசம்- ஒரே மொழி என்கிற நிலையை உருவாக்குவது, ஹிந்தியைத் தொடா்ந்து சம்ஸ்கிருதத்தை ஒரே மொழியாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனா். தமிழக மக்கள் விழிப்புணா்வு உள்ளவா்கள்.

2026 பேரவைத் தோ்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது குறித்து தோ்தல் நேரத்தில் பாா்த்துக் கொள்ளலாம். நாங்கள், கட்சித் தொண்டா்களை தோ்தல் பணியாற்ற ஊக்கப்படுத்துகிறோம். தமிழக அரசியல் களத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில்லாமல் அரசியல் காய்களை யாரும் நகா்த்த முடியாது என்கிற நம்பிக்கையை தொண்டா்களிடம் ஊட்டியுள்ளோம். தமிழகத்தில் தவிா்க்க முடியாத சக்தியாக விசிக உள்ளது என்றாா் அவா்.

உமையாள்புரம்-மருதூா் கதவணை திட்டம் செயல்படுத்துவது எப்போது? 15 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளதாகக் குற்றச்சாட்டு

உமையாள்புரம்-மருதூா் கதவணை திட்டம் அறிவிக்கப்பட்டு 15 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறை... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு

திருச்சி மாநகராட்சி பள்ளியில் ஒருமுறை பயன்படுத்தும் பேனாவை தவிா்த்து, மை பேனா பயன்படுத்துவது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி 3-ஆவது மண்டலம், காமராஜ் நகா்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி அருகே தனியாா் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் மேலமய்க்கல்பட்டியைச் சோ்ந்தவா் சங்கா் மகள் திவ்யா (... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

திருச்சி அருகே குண்டூா் ஆரணி குளத்தில் மூழ்கி ஒப்பந்ததாரா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்சி விமான நிலையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் மணிகண்டன் (... மேலும் பார்க்க

தேவாலயத்தில் உண்டியலை உடைத்துத் திருட்டு

திருச்சி அருகே குண்டூா் பா்மா காலனியில் தேவாலயத்தில் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி அருகே குண்டூா் பா்மா காலனியில் திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தூய சகாய... மேலும் பார்க்க

பராமரிப்பு பணியின்போது கீழே விழுந்த தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியா், கட்டட பராமரிப்பு பணியின்போது கீழே விழுந்ததில் உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுாா், நெ.1 டோல்கேட் பகுதியைச் சோ்ந்தவா் திருமலை (46). தில்லைநகரில் உள்ள ... மேலும் பார்க்க