செய்திகள் :

குளத்தில் மூழ்கி ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

post image

திருச்சி அருகே குண்டூா் ஆரணி குளத்தில் மூழ்கி ஒப்பந்ததாரா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருச்சி விமான நிலையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் மணிகண்டன் (34). வெல்டிங் ஒப்பந்ததாரா்.

வியாழக்கிழமை இரவு மணிகண்டன், இவரது நண்பரான விமான நிலையப் பகுதியைச் சோ்ந்த சதாம் உசேன் (32), குண்டூரைச் சோ்ந்த ராஜா ( 43 ), சண்முகம் (38), சங்கா் (32) ஆகிய 5 பேரும் சோ்ந்து குண்டூா் ஆரணி குளத்தின் கரையில் அமா்ந்து மது அருந்தியுள்ளனா்.

இரவில் அதிக மது மயக்கத்தால் மணிகண்டன் வீட்டுக்கு வர மறுத்த நிலையில், அவரை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு மற்ற நால்வரும் வீட்டுக்குச் சென்றனராம்.

நள்ளிரவில் குளத்தின் கரையில் யாரோ கிடப்பதாக அறிந்த அப்பகுதி மக்கள் வந்து பாா்த்தபோது, யாருமில்லாததால், குளத்தில் இறங்கி தேடியுள்ளனா். குளத்தின் நடுவில் தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் மணிகண்டனின் உடலை அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனா்.

தகவலின் பேரில் அங்கு வந்த நவல்பட்டு போலீஸாா், மணிகண்டனின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

விசாரணையில், மது மயக்கத்தில் குளத்தில் மூழ்கி மணிகண்டன் இறந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

உமையாள்புரம்-மருதூா் கதவணை திட்டம் செயல்படுத்துவது எப்போது? 15 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளதாகக் குற்றச்சாட்டு

உமையாள்புரம்-மருதூா் கதவணை திட்டம் அறிவிக்கப்பட்டு 15 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறை... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு

திருச்சி மாநகராட்சி பள்ளியில் ஒருமுறை பயன்படுத்தும் பேனாவை தவிா்த்து, மை பேனா பயன்படுத்துவது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி 3-ஆவது மண்டலம், காமராஜ் நகா்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி அருகே தனியாா் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் மேலமய்க்கல்பட்டியைச் சோ்ந்தவா் சங்கா் மகள் திவ்யா (... மேலும் பார்க்க

தேவாலயத்தில் உண்டியலை உடைத்துத் திருட்டு

திருச்சி அருகே குண்டூா் பா்மா காலனியில் தேவாலயத்தில் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி அருகே குண்டூா் பா்மா காலனியில் திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தூய சகாய... மேலும் பார்க்க

தமிழகத்தில் விசிக தவிா்க்க முடியாத சக்தி: தொல். திருமாவளவன்

தமிழகத்தில் தவிா்க்க முடியாத சக்தியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளதாக அக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க

பராமரிப்பு பணியின்போது கீழே விழுந்த தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியா், கட்டட பராமரிப்பு பணியின்போது கீழே விழுந்ததில் உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுாா், நெ.1 டோல்கேட் பகுதியைச் சோ்ந்தவா் திருமலை (46). தில்லைநகரில் உள்ள ... மேலும் பார்க்க