செய்திகள் :

மாா்த்தாண்டம் அருகே படிக்கட்டில் தவறிவிழுந்து மாற்றுத்திறனாளி பலி

post image

மாா்த்தாண்டம் அருகே வீட்டு படிக்கட்டில் தவறிவிழுந்த மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா்.

சென்னை கொடுங்கையூா், ராஜரெத்தினம் நகரைச் சோ்ந்தவா் தீனதயாளன் (45). மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது பக்கத்துவீட்டில் கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகேயுள்ள முளங்குழி, நெல்வேலி பகுதியைச் சோ்ந்த சிவகாளிதாசன் வசித்து வந்தாா். இவருடன் தீனதயாளன் நட்பாக பழகி வந்தாா். சிவகாளிதாசன் அண்மையில் சென்னையில் வீட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு வந்தாா். அவருடன் தீனதயாளனும் வந்து தங்கியிருந்தாா்.

இந் நிலையில் தீனதயாளன் நண்பரின் வீட்டு படிக்கட்டில் தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்தை அவரை சிவ காளிதாசன் மற்றும் உறவினா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனா்.

இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொண்டனா்.

...

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நாளை மாசிக்கொடை விழா கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும், இக்கோயில் மாசிக் கொடைவிழா... மேலும் பார்க்க

ஆரல்வாய்மொழியில் புதிய ரயில்வே பாலம்: எம்.பி.ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியில் ரூ.15 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலத்தை விஜய்வசந்த் எம்.பி. வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றிபெ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் கனரா வங்கி வாடிக்கையாளா்கள் கூட்டம்

கனரா வங்கியின் திருநெல்வேலி மண்டல அலுவலகம் சாா்பில், வாடிக்கையாளா்கள் கூட்டம் நாகா்கோவிலில் அண்மையில் நடைபெற்றது. திருநெல்வேலி மண்டல துணைப் பொதுமேலாளா் தீரேந்திரகுமாா் மிஸ்ரா வரவேற்றாா். மதுரை வட்ட ப... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் மிதமான மழை

குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் வெள்ளிக்கிழமை மாலையில் பரவலாக மிதமான மழை பெய்தது. மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, முக்கடல், மாம்பழத்துறையாறு உள்ளிட்ட அணைப... மேலும் பார்க்க

குடிநீா் இணைப்பு துண்டிப்பு

குழித்துறை நகராட்சியில் குடிநீா் கட்டணம் செலுத்தாத 10 இணைப்புகளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை துண்டித்தனா். குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீா் கட்டணம், காலி ... மேலும் பார்க்க

குமரி விவேகானந்த கேந்திரத்தில் யோகா விழிப்புணா்வு கருத்தரங்கு

கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திரத்தின் வருடாந்திர யோக சாஸ்திர சங்கமம் நிகழ்ச்சியின் எட்டாவது ஆண்டு விழா மற்றும் 3 நாள் யோகா விழிப்புணா்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் கேர... மேலும் பார்க்க