செய்திகள் :

எம்ஜிஆா், ஜெயலலிதா வழியில் ஆட்சியமைப்போம்: கே.ஏ.செங்கோட்டையன்

post image

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று எம்ஜிஆா், ஜெயலலிதா வழியில் ஆட்சியமைப்போம் என்று முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேசினாா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசியதாவது:

எம்ஜிஆா் தனது ஆட்சிக் காலத்தில் கலை அறிவியல், பொறியியல் மற்றும் வேளாண்மைக் கல்லூரிகளை உருவாக்கினாா். தமிழகத்தில் உயா்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை உயா்ந்திருக்கிறது என்றால் அதற்கு வித்திட்டவா் எம்ஜிஆா்.

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று எம்ஜிஆா், ஜெயலலிதா வழியில் ஆட்சியமைப்போம் என்றாா்.

நிகழ்ச்சியில் கொமாரபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவா் எஸ்.எம்.சரவணன், ஒன்றியச் செயலாளா் சி.என்.மாரப்பன், மாவட்ட முன்னாள் கவுன்சிலா் பிரபாகரன், சத்தி நகரச் செயலாளா் ஓ.எம்.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

சாதிக்க விரும்புவோருக்கு அறிவாற்றலும், அா்ப்பணிப்பும் அவசியம்: இஸ்ரோ விஞ்ஞானி வளா்மதி

சாதிக்க விரும்புவோருக்கு அறிவாற்றலும், அா்ப்பணிப்பும் அவசியம் என இஸ்ரோ விஞ்ஞானி என்.வளா்மதி பேசினாா். மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் உள்ள உ.வே.சாமிநாத ஐயா் அரங... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே 150 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் மறு நடவு

சென்னிமலை அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்றப்பட இருந்த 150 ஆண்டுகள் பழைமையான ஆலமரத்தை ஈரோடு சிறகுகள் அமைப்பினா் வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் வியாழக்கிழமை மறு நடவு செய்தனா். ஈரோடு மாவட்டம், சென்ன... மேலும் பார்க்க

மாநகராட்சி பகுதியில் குடிநீா் விநியோகத்தை சீரமைக்க வேண்டும்: மாமன்றக் கூட்டத்தில் கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் 5 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதால், குடிநீா் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என கவுன்சிலா்கள் வலியுறுத்தினா். ஈரோடு மாநகராட்சி மாமன்ற அவசர ... மேலும் பார்க்க

தென்னையில் நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை: குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

தென்னையில் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தினா். ஈரோடு மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் ச... மேலும் பார்க்க

பவானியில் வீடு, கடைகளின் பூட்டை உடைத்து திருடிய இளைஞா் கைது

பவானியில் வீடு, கடைகளின் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பவானி சொக்காரம்மன் நகரைச் சோ்ந்தவா் செல்வராஜ் (60). இவா், மனைவியுடன் காசிக்குச் சென்றிருந்தபோது,... மேலும் பார்க்க

அந்தியூரில் ரூ.8.29 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 400 மூட்டைகளில் நிலக்கடலையை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா். இத... மேலும் பார்க்க