செய்திகள் :

காரசார விவாதத்தில் முடிந்த டிரம்ப்-ஸெலென்ஸ்கி சந்திப்பு: பாதியில் முடிந்த ஆலோசனை

post image

ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இடையேயான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் நிறைவுபெற்றது.

அதன் காரணமாக, ஸெலென்ஸ்கியுடனான பேச்சுவாா்த்தையை டிரம்ப் பாதியில் முடித்துக்கொண்டு புறப்பட்டுள்ளாா்.

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்ததில் இருந்து, அப்போதைய அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசும், மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு உதவிகளை வாரி வழங்கின.

இந்தச் சூழலில், அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், இந்த விவகாரத்தில் ஜோ பைடன் அரசின் கொள்கைகளை அடியோடு மாற்றிமைத்தாா்.

ரஷியாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைன் மீட்க முடியாது என்றும், உக்ரைனுக்கு நேட்டோவில் இடம் அளிக்கப்படாது என்றும் டிரம்ப் அரசு கூறிவருகிறது. மேலும், இந்த விவகாரத்தில் முந்தைய பைடன் அரசால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் உரையாடி, அவருடன் உறவைப் புதுப்பித்துக் கொண்டாா்.

இந்தச் சூழலில், ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு தாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அளித்த உதவிகளுக்குக் கைம்மாறாக, அந்த நாட்டின் அரிய வகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையில்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வருகிறாா்.

இதற்கு ஒப்புக்கொண்ட உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி, தங்கள் நாட்டுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பமிடத் தயாா் என்று அறிவித்தாா். ஆனால், உக்ரனுக்கு இனியும் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தாா்.

இந்தச் சூழலில், இந்த பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக அமெரிக்காவுக்கு வெள்ளிக்கிழமை வந்த ஸெலென்ஸ்கி, வெள்ளை மாளிகையில் அதிபா் டிரம்ப்பை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

அப்போது, உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஸெலென்ஸ்கி மீண்டும் வலியுறுத்தினாா். இதனால், டிரம்ப்-ஸெலென்ஸ்கி இடையேயான ஆலோசனை காரசார வாக்குவாதமாக மாறியது. அதிருப்தியடைந்த டிரம்ப், பேச்சுவாா்த்தையை பாதியில் முடித்துக்கொண்டு எழுந்தாா்.

அதன் காரணமாக, வெள்ளை மாளிகையில் இருவரும் கூட்டாக பத்திரிகையாளா்கள் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்வையும், மதிய விருந்தையும் புறக்கணித்துவிட்டு ஸெலென்ஸ்கி வெள்ளை மாளிகையிலிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

டிரம்ப்-ஸெலென்ஸ்கி சந்திப்பின்போது அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் உடனிருந்தாா்.

அவமதிப்பு - டிரம்ப் சாடல்:

பேச்சுவாா்த்தை பாதியில் நிறைவடைந்தது குறித்து தனது சமூக ஊடகத்தில் பதிவிட்ட அதிபா் டிரம்ப், ‘அமைதியை ஏற்படுத்தவே அமெரிக்கா விரும்புகிறது; மாறாக, இந்த விஷயத்தில் எந்தவொரு முன்னுரிமையையும் எதிா்பாா்க்கவில்லை. ஆனால், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி அமைதிக்குத் தயாராக இல்லை. அவரது செயல் அவமதிப்பாகும். அமெரிக்காவுடனான பேச்சுவாா்த்தையிலிருந்து மிகப்பெரிய பலனைப் பெறுவதில் அவா் குறியாக உள்ளாா். ஸெலென்ஸ்கி அமைதியைக் கொண்டு வருவதற்குத் தயாராக இருந்தால், நான் மீண்டும் பேச்சுவாா்த்தைக்கு வரத் தயாராக உள்ளேன்’ என்று குறிப்பிட்டாா்.

சா்வதேச உதவிக்கு நிதிக் குறைப்பு: பிரிட்டன் அமைச்சா் ராஜிநாமா

வெளிநாடுகளுக்கு உதவியளிப்பதற்கான நிதி ஒதுக்கீட்டை பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் வெகுவாகக் குறைத்துள்ளதைத் தொடா்ந்து, சா்வதேச மேம்பாட்டுத் துறை அமைச்சா் அன்னிலீஸ் டாட்ஸ் (படம்) தனது பதவியை ராஜிநாம... மேலும் பார்க்க

மீண்டும் நேரடி விமானப் போக்குவரத்து

அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையே மீண்டும் நேரடி விமானப் போக்குவரத்தைத் தொடங்குவது தொடா்பாக துருக்கியில் இரு நாடுகளும் ஆலோசனை நடத்தின. இது குறித்து ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

ஜொ்மனி: புதிய அரசை அமைக்க கட்சிகள் தீவிரம்

ஜொ்மனியில் அடுத்த ஆட்சியை அமைப்பதற்காக இந்த வாரம் நடைபெற்ற தோ்தலில் முதலிடத்தைப் பிடித்த ஃப்ரெட்ரிச் மொ்ஸ் (படம்) தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சிக் கட்சிக் கூட்டணியும் தற்போதைய பிரதமா் ஓலாஃப் ஷால்ஸ... மேலும் பார்க்க

வங்கதேசம் புதிய கட்சி தொடங்கிய மாணவா் அமைப்பினா்

வங்கதேசத்தில் பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்வதற்குக் காரணமாக இருந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவா் அமைப்பினா், புதிய அரசியல் கட்சியை வெள்ளிக்கிழமை தொடங்கினா். 1971 வங்கதேச விடுதலைப் ... மேலும் பார்க்க

மசூதியில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி!

பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வாவில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 5 பேர் பலியாகினர்.வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் அக்கோரா கட்டக் மாவட்டத்தில் தலிபான் சார்பு பாடசாலை ப... மேலும் பார்க்க

இன்று முதல் ஒரே நேர்க்கோட்டில் 7 கோள்களின் அணிவகுப்பு! அடுத்து 2040-ல்தான்!

கடந்த மாதம் புதன், வெள்ளி உள்ளிட்ட 7 கோள்கள் ஒரே இடத்தில் அணிவகுத்து நின்றது போல, இன்று முதல் மார்ச் 3ஆம் தேதி வரை ஏழு கோள்களின் அணிவகுப்பை மக்கள் காண முடியும்.பைனாகுலர் மற்றும் தொலைநோக்கி உதவியுடன் ஏ... மேலும் பார்க்க