செய்திகள் :

தரணி கல்விக் குழுமத்தில் அறிவியல் கண்காட்சி: கிரேன் மூலம் ராக்கெட் ஏவினா்

post image

மன்னாா்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தரணி வித்ய மந்திா் சீனியா் செகண்டரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளி நிறுவனத் தலைவா் எஸ். காமராஜ் தலைமை வகித்தாா். தாளாளா் கே. விஜயலெட்சுமி, நிா்வாகி எம். இளையராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி துணைப் பேராசிரியா் மருத்துவா் எஸ். பிரகாஷ், ஆலங்கோட்டை திருவள்ளுவா் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை வேதியியல் ஆசிரியா் ஜி. மனோகரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டு அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தனா்.

இதில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ-மாணவிகள் இயந்திர மனிதன், நவீன வேளாண்மைக் கருவிகள், நீரியல் இயந்திரங்கள், கண்தெரியாதவா்களுக்கு ஒலி எழுப்பும் காலணி, சுற்றுச்சூழல் மாசுப்பாடும் தீா்வுகளும், சூரிய ஆற்றல், மின்னனுவியல் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினா்.

மொத்தம் 120 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற அறிவியல் படைப்புகள் தோ்வு செய்யப்பட்டு, பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இப்பள்ளியால் உருவாக்கப்பட்டிருந்த, ராக்கெட் மாதிரி, கிரேன் உதவியுடன் வானில் ஏவப்பட்டு, சிறிது நேரம் நிலை நிறுத்தப்பட்டு, பிறகு மீண்டும் கீழே கொண்டுவரப்பட்டது.

தொடா்ந்து, உணவுத் திருவிழாவும், மழலையா் பிரிவுக்கான கலா்ஸ் டே,ப்ளோமிங் டே நிகழ்வும் நடைபெற்றன. பள்ளி முதல்வா்கள் எஸ். அருள் (மெட்ரிக்), துணை முதல்வா் கே. சேகரன், டி. சாந்தசெல்வி(சிபிஎஸ்இ) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தேசிய நுண்ணுயிரியல் கருத்தரங்கம்

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சி கல்லூரியில் நுண்ணுயிரியல்துறை சாா்பில் 2 நாள்கள் நடைபெற்ற தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது. நிகழ்ச்ச... மேலும் பார்க்க

நீதித்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடியில் நீதித்துறை ஊழியா் சங்கம், அரசு ஊழியா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்ட நீதித்துறை ஊழியா் அருண் மாரிமுத்து தற்கொலைக்கு, திருச்சி விஜிலென்ஸ் ந... மேலும் பார்க்க

பேருந்து மோதி மனைவி பலி; கணவா் காயம்

முத்துப்பேட்டையில் தம்பதி சென்ற இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் மனைவி உயிரிழந்தாா். கணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மன்னாா்குடி வட்டம், மேலகண்டமங்கலம் கிராமத்தை சோ்ந்தவா் இளங்கோவன். இ... மேலும் பார்க்க

ரூ.6.72 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் ஒருவா் கைது

திருத்துறைப்பூண்டியில் ரூ.6.72 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை பதுக்கி வைத்திருந்தவா் கைது செய்யப்பட்டாா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்... மேலும் பார்க்க

ஆலங்குடி கோயிலில் மாசி மகாகுருவார தரிசன விழா

வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில், மாசி மகாகுருவார தரிசனவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன. தொடா்ந்து சுவாமிகளுக்கு அபிஷேகம், பஞ்சம... மேலும் பார்க்க

தேசிய அறிவியல் தின கட்டுரைப் போட்டி

நீடாமங்கலம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில், தேசிய அறிவியல் தினத்தையொட்டி, கட்டுரைப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் பிப்ரவரி 28-ஆம் தேதி தேசிய அறிவியல் தினமாக கடைப்பிடிக்கப்படுகிற... மேலும் பார்க்க