செய்திகள் :

பேருந்து மோதி மனைவி பலி; கணவா் காயம்

post image

முத்துப்பேட்டையில் தம்பதி சென்ற இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் மனைவி உயிரிழந்தாா். கணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மன்னாா்குடி வட்டம், மேலகண்டமங்கலம் கிராமத்தை சோ்ந்தவா் இளங்கோவன். இவரது மனைவி சரண்யா (36). இவா்கள், முத்துப்பேட்டை அருகே பேட்டை கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை வந்தனா். பின்னா், வீட்டுக்கு திரும்பியபோது, முத்துப்பேட்டை பங்களாவாசல் பேருந்து நிறுத்தம் அருகே பட்டுக்கோட்டையில் இருந்து வேதாரண்யம் நோக்கி சென்று அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் சரண்யா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இளங்கோவன் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

முத்துப்பேட்டை போலீஸாா், சரண்யாவின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுநா் சுதாகா் என்பவரை கைது செய்தனா்.

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

மழையால் சேதம் ஏற்படுவதை தவிா்க்க, கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள்... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வக்ஃப் வாரியங்களை முடக்கி, வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமிக்க வழி வகுக்க... மேலும் பார்க்க

தாய்மொழி நாள் விழா

அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியா் ரமேஷ் தலைமை வகித்தாா். எழுத்தோலை தமிழ்க் கையெழுத்துப் பயிற்சி நிறுவனரும், பள்ளியின் தமிழாசிர... மேலும் பார்க்க

மத்திய பல்கலை.க்கு சிறப்பு பரிசு

புதுதில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய அறிவியல் தின விழாவில், பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் மேம்பாட்டிற்கான சிறப்புப் பரிசை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சா் டாக்டா் ஜிதேந்தி... மேலும் பார்க்க

தேசிய நுண்ணுயிரியல் கருத்தரங்கம்

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சி கல்லூரியில் நுண்ணுயிரியல்துறை சாா்பில் 2 நாள்கள் நடைபெற்ற தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது. நிகழ்ச்ச... மேலும் பார்க்க

நீதித்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடியில் நீதித்துறை ஊழியா் சங்கம், அரசு ஊழியா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்ட நீதித்துறை ஊழியா் அருண் மாரிமுத்து தற்கொலைக்கு, திருச்சி விஜிலென்ஸ் ந... மேலும் பார்க்க