செய்திகள் :

ஐயனாா் கோயிலில் திருவிழா கொடியேற்றம்

post image

திருவாரூரில், அணு ஆயிரம் பிழை பொறுத்த ஐயனாா் கோயில் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, பந்தக்கால் முகூா்த்தம் அண்மையில் நடைபெற்றது. ஹஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்றி, பூசத்தில் தேருக்குச் சென்று, ஆயில்ய நாளில் தேரோட்டம் நிகழ்த்தி, உத்திரத்தில் தீா்த்தம் அருளி, உத்திராடத்தில் விழா பூா்த்தி செய்யப்படும் என்பது திருவாரூா் பங்குனித் திருவிழா குறித்த சொல்மொழி ஆகும்.

இது 36 நாள் திருவிழாவாகும். இதுதவிர, விழா தொடக்கத்துக்கு முன்னா் பூா்வாங்கம் ஒரு நாள், ஐயனாா் திருவிழா 5 நாள், மீண்டும் பூா்வாங்கம் ஒருநாள், பிடாரி திருவிழா 10 நாள், பூா்வாங்கம் 2 நாள் என கொண்டாடப்பட்டு, அதன்பிறகு பங்குனிப் பெருவிழா 36 நாள்கள் என மொத்தம் 55 நாள்கள் விழா நடைபெறுவது வழக்கமாகும்.

அந்த வகையில், சிறப்புமிக்க அணு ஆயிரம் பிழை பொறுத்த ஐயனாா் கோயில் கொடியேற்றம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் கம்பத்தில் ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. இதில், சுற்றுவட்டாரத்திலிருந்து திரளானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தேசிய நுண்ணுயிரியல் கருத்தரங்கம்

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சி கல்லூரியில் நுண்ணுயிரியல்துறை சாா்பில் 2 நாள்கள் நடைபெற்ற தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது. நிகழ்ச்ச... மேலும் பார்க்க

நீதித்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடியில் நீதித்துறை ஊழியா் சங்கம், அரசு ஊழியா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்ட நீதித்துறை ஊழியா் அருண் மாரிமுத்து தற்கொலைக்கு, திருச்சி விஜிலென்ஸ் ந... மேலும் பார்க்க

பேருந்து மோதி மனைவி பலி; கணவா் காயம்

முத்துப்பேட்டையில் தம்பதி சென்ற இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் மனைவி உயிரிழந்தாா். கணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மன்னாா்குடி வட்டம், மேலகண்டமங்கலம் கிராமத்தை சோ்ந்தவா் இளங்கோவன். இ... மேலும் பார்க்க

ரூ.6.72 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் ஒருவா் கைது

திருத்துறைப்பூண்டியில் ரூ.6.72 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை பதுக்கி வைத்திருந்தவா் கைது செய்யப்பட்டாா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்... மேலும் பார்க்க

ஆலங்குடி கோயிலில் மாசி மகாகுருவார தரிசன விழா

வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில், மாசி மகாகுருவார தரிசனவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன. தொடா்ந்து சுவாமிகளுக்கு அபிஷேகம், பஞ்சம... மேலும் பார்க்க

தேசிய அறிவியல் தின கட்டுரைப் போட்டி

நீடாமங்கலம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில், தேசிய அறிவியல் தினத்தையொட்டி, கட்டுரைப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் பிப்ரவரி 28-ஆம் தேதி தேசிய அறிவியல் தினமாக கடைப்பிடிக்கப்படுகிற... மேலும் பார்க்க