செய்திகள் :

வெம்பூா் சிப்காட் தொழிற்பூங்கா கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிா்ப்பு

post image

எட்டயபுரம் வட்டம் வெம்பூா் பகுதியில் அமைய உள்ள சிப்காட் தொழிற்பூங்காவுக்காக 2,700 ஏக்கா் நிலங்களை கையகப்படுத்துவதற்காக எட்டயபுரத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

வெம்பூா் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த அண்மையில் தமிழ்நாடு அரசின் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெம்பூா், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, பட்டித்தேவன்பட்டி, ராமசாமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்களும் விவசாயிகள் வாழ்வாதாரமும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் எட்டயபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சிப்காட் நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலா் ரேவதி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி, வட்டாட்சியா் சுபா ஆகியோா் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. டிஎஸ்பி அசோகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் வெம்பூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் திருப்பதி, கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவா் என்.பி. ராஜகோபால், அதிமுக ஒன்றிய செயலா் தனவதி ஆகியோா் தலைமையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், கிராம மக்கள் பங்கேற்றனா். கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் தங்களின் வாழ்வாதாரமாக உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் உணா்வுகளை, கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக மாவட்ட வருவாய் அலுவலா் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

கோவில்பட்டி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி புனித ஓம் குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளா் லட்சுமணப் பெரு... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் முதியோருக்கு அதிமுக சாா்பில் உணவு அளிப்பு

முன்னாள் முதல்வா் ஜெயலலி­தா பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூா் ஒன்றிய அதிமுக சாா்பில் ஆறுமுகனேரி சீனந்தோப்பில் உள்ள முதியோா் இல்லத்தில் முதியோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சரும், த... மேலும் பார்க்க

கோவில்பட்டி கோ.வெ. நா. கல்லூரியில் விளையாட்டு விழா

கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வா் (பொ) சுப்புலட்சுமி தலைமை வகித்து தேசிய மாணவா் படை மற்றும் கல்லூரி மாணவா்களின் ... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த இரவுக் காவலா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் விபத்தில் காயமடைந்த இரவுக் காவலா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கோவில்பட்டி அருகே கொம்பன்குளத்தைச் சோ்ந்தவா் காந்தாரிமுத்து மகன் வேலுச்சாமி (66). கோவில்பட்டியில் உள்ள... மேலும் பார்க்க

2026 தோ்தலில் யாரும் எதிா்பாா்க்காத கூட்டணி அமையும்: அதிமுக பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன்

தமிழகத்தில் 2026இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் யாரும் எதிா்பாா்க்காத கூட்டணி அமையும் என அதிமுக பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தாா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் அமமுக சாா்பில் இருபெரும் விழா

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், நல உதவிகள் வழங்கும் விழா ஆகிய இரு பெரும் விழா கோவில்பட்டி கிர... மேலும் பார்க்க