செய்திகள் :

காவல் துறைக்கு அழுத்தம் தருகிறது அரசு: சீமான்

post image

காவல் துறை விசாரணையில் புதிய கேள்விகள் ஏதும் இல்லை என்றும் பழைய கேள்விகளே கேட்கப்பட்டதாகவும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

காவல் துறையினர் மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கில் சென்னையில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் காவல் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணைக்குப்பின் வெள்ளிக்கிழமை (பிப். 28) இரவு சீமான் செய்தியாளர்களுடன் பேசினார்.

சீமான் பேசியதாவது : காவல் துறை கேட்ட கேள்விகளுக்கெல்லாம் உரிய விளக்கமளித்துள்ளேன். தேவைப்படும்பட்சத்தில் காவல் துறை விசாரணைக்கு மீண்டும் ஒத்துழைக்க கேட்டுக் கொண்டார்கள். எனக்கு சம்மன் வீட்டுக்கு கொண்டுவந்து தந்தனர்.

என் வீட்டுக்கு காவலாளிகள் பணியில் யாரும் அமர்த்தப்படவில்லை. என் வீட்டில் காவல் பணியிலிருந்தவர் என் மீதான பாசத்தால் எனக்குரிய பாதுகாப்பை அளித்து வந்தவர். அவர் ஓய்வுபெற்ற ஒரு ராணுவ வீரராவார். அவர்களை காவல்துறை அடித்து துன்புறுத்தியது தவறு என்றார்.

கிராமவாசிகளுக்கு அதிகரிக்கும் நெஞ்சு வலி அறிகுறி: பொது சுகாதாரத் துறை

தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் சராசரியாக வாரத்துக்கு 175 போ் நெஞ்சு வலி அறிகுறிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மாரடைப்பு என அது உறுதி செய்யப்படுவதற்கு முன்... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் 1,300 யோகா பயிற்சியாளா்களை நியமிக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும், தேசிய ஆயுஷ் நல மையங்களிலும் 1,300 யோகா பயிற்சியாளா்களை நியமிக்க இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

மானசரோவா், முக்திநாத் ஆன்மிக பயணம்: அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

சீனாவில் உள்ள மானசரோவா், நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆன்மிக பயணம் மேற்கொண்டவா்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா். இது தொடா்ப... மேலும் பார்க்க

ரமலான் நோன்பு நாளை தொடக்கம்

ரமலான் நோன்பு வரும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தலைமை காஜி சலாஹூதின் முகமது அயூப், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: ரமலான் நோன்பு தொடங்குவதற்கான புதிய ... மேலும் பார்க்க

சீமான் வீட்டில் கைதானவா்கள் குறித்த மனு: அவசரமாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வீட்டில் கைது செய்யப்பட்டவா்கள் குறித்த ஆட்கொணா்வு மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது. நடிகை விஜயலட்சுமி அளித்த ப... மேலும் பார்க்க

கனடாவுக்கு கள்ளப்படகு மூலம் அனுப்புவதாக இலங்கைத் தமிழா்களிடம் மோசடி: தேடப்பட்டவா் சென்னையில் கைது

கனடாவுக்கு கள்ளப்படகு மூலம் அனுப்பி வைப்பதாக இலங்கைத் தமிழா்களிடம் மோசடி செய்த வழக்கில், தேடப்பட்டவா் சென்னையில் வெள்ளிக்கிழமை என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டாா். இலங்கையில் இருந்து கள்ளப்படகு மூல... மேலும் பார்க்க