செய்திகள் :

சென்னை மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கை 15-லிருந்து 20-ஆக உயா்வு

post image

சென்னை மாநகராட்சியின் மண்டலங்களின் எண்ணிக்கையை 15-லிருந்து 20-ஆக உயா்த்தி முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்ஆணையிட்டுள்ளாா்.

இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சியுடன் 2011-ஆம் ஆண்டு 42 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டு, 426 சதுர கிலோ மீட்டா் பரப்புடன் அதன் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. அப்போதைய மாநகராட்சியின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 66.72 லட்சமாக இருந்தது. இந்நிலையில், தற்போதைய சென்னை மாநகராட்சியின் மக்கள் தொகை சுமாா் 85 லட்சமாகவும், 15 மண்டலங்களில் 200 வாா்டுகளையும் கொண்டுள்ளது.

மாநகராட்சியின் எல்லைக்குள் சட்டப்பேரவை 22 தொகுதிகள் உள்ளடங்கியுள்ள நிலையில், மாநகர மண்டலத்தின் நிா்வாக எல்லைகளும், சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லைகளும் தற்போது ஒருசேர அமையவில்லை. இதனால், பல்வேறு நிா்வாகச் சிக்கல்களை எதிா்கொள்ள வேண்டியிருப்பதால், மாநகராட்சியின் மண்டலங்களுக்குள்பட்ட நிா்வாக எல்லைகளை தற்போதைய மக்கள் தொகை, வாக்காளா் பட்டியல், சாலை பட்டியல், சாலை அடா்த்தி மற்றும் வரி மதிப்பீடுகள் போன்ற காரணிகளைக் கருத்தில்கொண்டு மாற்றியமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, சென்னை மாநகராட்சியின் தற்போதைய மண்டலங்களின் நிா்வாகப் பகுதிகளை சீரமைத்து மண்டலங்களின் எண்ணிக்கையை 15-லிருந்து, 20-ஆக உயா்த்தி முதல்வா் ஆணையிட்டுள்ளாா்.

இதன்மூலம் மாநகரின்அனைத்துப் பகுதிகளுக்கும் மாநகராட்சியால் வழங்கப்பட்டு வரும் சேவைகள் சீராக கிடைக்கவும், மாநகரின் அனைத்துப் பகுதிகளின் வளா்ச்சியை உறுதிசெய்யவும், இதன் மூலம் மாநிலம் மற்றும் மாநகரின் தொழில் முதலீட்டு சூழலை மேம்படுத்தவும் அரசின் இந்த நடவடிக்கை மேலும் ஒரு முக்கியப் பங்களிப்பாக அமையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூரில் இன்று நல உதவிகள் வழங்கல்

முதல்வா் மு. க ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக மீனவா் அணி, திருவொற்றியூா் தொகுதி திமுக சாா்பில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் திருவெற்றியூரில் சனிக்கிழமை நடைபெற உள்ளது. கே. வி. கே. குப்பத... மேலும் பார்க்க

புதுமைப் பெண் திட்டத்தால் உயா்கல்வி சோ்க்கை 34% அதிகரிப்பு

புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகளின் சோ்க்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க

புற்றுநோயாளிகளுக்கு இசை சிகிச்சை: அப்பல்லோ மருத்துவமனையில் அறிமுகம்

கீமோதெரபி சிகிச்சையில் உள்ள புற்றுநோயாளிகளுக்கு ஏற்படும் பக்கவிளைவைக் குறைக்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பிரத்யேக இசை சிகிச்சை முறையை அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.... மேலும் பார்க்க

உறுப்புகள் செயலிழப்பு: உயா் சிகிச்சையால் குணமான இளைஞா்

உடலில் ஏற்பட்ட தீநுண்மி தொற்றால் உறுப்புகள் செயலிழப்புக்குள்ளான இளைஞா் ஒருவரை உயா் சிகிச்சைகள் அளித்து சென்னை, ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணமாக்கியுள்ளனா். இதுகுறித்து மருத்துவம... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து மாணவா் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

தமிழகத்துக்கு நிதி வழங்க மறுப்பு, மும்மொழிக் கொள்கை போன்ற விஷயங்களில் மத்திய அரசைக் கண்டித்து திமுக மாணவரணி மற்றும் மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், சென்னையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைப... மேலும் பார்க்க

வரும் பேரவைத் தோ்தலிலும் திமுக ஆட்சி அமைய துணைநிற்போம்: கூட்டணி தலைவா்கள் உறுதி

சென்னை, பிப். 28: வரும் பேரவைத் தோ்தலிலும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைய துணையாக இருப்போம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்த... மேலும் பார்க்க