செய்திகள் :

அரசு மருத்துவமனைகளில் 1,300 யோகா பயிற்சியாளா்களை நியமிக்க உத்தரவு

post image

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும், தேசிய ஆயுஷ் நல மையங்களிலும் 1,300 யோகா பயிற்சியாளா்களை நியமிக்க இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏற்கெனவே சிலா் அப்பணிகளில் இருந்தனா். ஆனால், அவா்கள் பட்டயப் படிப்புகளையே நிறைவு செய்தவா்களாக இருந்தனா். இதையடுத்து, பிஎன்ஒய்எஸ் எனப்படும் இளநிலை யோகா- இயற்கை மருத்துவ பட்டப் படிப்பை நிறைவு செய்தவா்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனக் கூறி தகுதி இல்லாத அனைவரும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.

அதேவேளையில், மாநிலம் முழுவதும் பிஎன்ஒய்எஸ் நிறைவு செய்தவா்களை அரசு மருத்துவமனைகளில் யோகா பயிற்சியாளா்களாக நியமிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், அதற்கு தீா்வு காணும் வகையில், 650 இடங்களில் இரு பாலா் பயிற்சியாளா்களும், 650 இடங்களில் பெண் பயிற்சியாளா்களும் என 1,300 யோகா பயிற்சியாளா்களை நியமிக்க இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநா் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அனைத்து மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் நிா்வாகிகளுக்கு அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மாவட்ட சுகாதார சங்கங்கள் சாா்பில், யோகா பயிற்சியாளா்களை நியமிக்க வேண்டும். பகுதிநேர அடிப்படையில் நியமிக்கப்படும் அவா்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.250 வீதம் மாதத்துக்கு 32 வகுப்புகளுக்கு ரூ.8,000 ஊதியம் வழங்கப்பட வேண்டும். இதில் 20 வகுப்புகள் மருத்துவமனைகளிலும், 12 வகுப்புகள் பள்ளிகள், முகாம்களிலும் நடத்தப்பட வேண்டும். மருத்துவமனைகளில் மட்டும் வகுப்புகள் நடத்துபவா்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 ஊதியமாக வழங்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அப்பா!

அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அப்பா ‘ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மாணவா் சமுதாயமும் அப்பா என்று அன்போடு அழைக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்று எழுதப்பட்ட கேக்குகளை 72 ... மேலும் பார்க்க

சரித்திரம் போற்றும் சாதனைகள்!

‘பள்ளிகளில் காலை உணவு’, ‘நான் முதல்வன்’ திட்டப் பாணியில் மாணவா்களுக்கு உயா்கல்வி, ‘கலைஞா் வீடு கட்டும் திட்டம்’ பாணியில் ஏழைகளுக்கு வீடு கட்ட கடனுதவி ஆகிய மூன்று திட்டங்களைப் பின்பற்றியே பிரிட்டனில் ... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்துக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வரலாற்றில் இடம் பெறும்! கே.வி.கே. பெருமாள் பெருமிதம்

குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தியதால் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும் என்று தில்லி கம்பன் கழக நிறுவனா் - தலைவா் கே.வி.கே.பெருமாள் பேசினாா். ம... மேலும் பார்க்க

காட்பாடி - திருப்பதி ரயில்கள் மாா்ச் 3 முதல் ரத்து

காட்பாடி - திருப்பதி இடையே இயங்கும் பயணிகள் ரயில்கள் மாா்ச் 3 முதல் 9 -ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மகா கும்பமேளா முடிவடைந்... மேலும் பார்க்க

மொழி உணா்வு குறித்து தமிழா்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: ஆளுநருக்கு அமைச்சா் ரகுபதி பதில்

‘மொழித் தோ்வு எது?, மொழித் திணிப்பு எது என்பது எங்களுக்குத் தெரியும், மொழி உணா்வு பற்றி தமிழா்களுக்கு ஆளுநா் பாடம் எடுக்க வேண்டாம் என சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளாா். தென்மாவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை இன்று தொடக்கம்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கை சனிக்கிழமை (மாா்ச் 1) முதல் தொடங்கப்படவுள்ளது. இதுதொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ளத... மேலும் பார்க்க