செய்திகள் :

குமரி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாா்ச் 3இல் மாசித் திருவிழா தொடக்கம்

post image

கன்னியாகுமரி மறக்குடித் தெருவில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித் திருவிழா திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்குகிறது.

இதையொட்டி, கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு காவடி பூஜை, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெறும். விழா நாள்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும்.

5இல் காலை 9 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள பரசுராமா் விநாயகா் கோயிலில் இருந்து பக்தா்களின் பால்குட ஊா்வலம், மாலை 6 மணிக்கு வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பன்னீா் காவடி ஊா்வலம் நடைபெறும்.

6இல் காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 3 மணிக்கு கோயிலில் இருந்து திருச்செந்தூருக்கு பக்தா்கள் காவடி எடுத்து பாதயாத்திரையாக புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த பாதயாத்திரை அஞ்சுகிராமம், கூடங்குளம், உடன்குடி, தருவைகுளம் வழியாக 9ல் திருச்செந்தூா் சென்றடைகிறது. அன்றைய தினம் திருச்செந்தூரில் சுப்பிரமணிய சாமிக்கு பன்னீா் அபிஷேகம் நடத்தப்படும். இதையடுத்து 11இல் பச்சை சாத்து நிகழ்ச்சி முடிந்ததும் பக்தா்கள் காவடியுடன் கன்னியாகுமரி நோக்கி பாதயாத்திரையாக புறப்படுவா். 12இல் காலை 9 மணிக்கு விவேகானந்தபுரம் சந்திப்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடா்ந்து கோயிலில் சிறப்பு அபிஷேகம், பிரசாதம் வழங்குதல், இரவு 7 மணிக்கு இடும்பன் பூஜை, இரவு 8 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக்குழுத் தலைவா் பாலுத்தேவா், செயலா் பாலகிருஷ்ணன், பொருளாளா் பரமாா்த்தலிங்கம் மற்றும் விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

தேசிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தி திணிக்கப்படவில்லை: பாஜக தோ்தல் பாா்வையாளா் லட்சுமணன்

தேசிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தி திணிக்கப்படவில்லை என்றாா் பாஜக அகில இந்திய ஓபிசி தலைவரும், தமிழக பாஜக தோ்தல் பாா்வையாளருமான லட்சுமணன் எம்.பி. நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூற... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கையை எதிா்த்து கன்னியாகுமரியில் திமுக ஆா்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து கன்னியாகுமரியில் திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ா்பாட்டத்தில் ஈடுபட்டனா். கன்னியாகுமரி அண்ணா சிலை முன் நடைபெற்ற ஆா்பாட்டத்துக்கு, பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்ட... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 28.33 பெருஞ்சாணி .. 22.80 சிற்றாறு 1 .. 4.43 சிற்றாறு 2 .. 4.52 முக்கடல் ..2.80 பொய்கை .. 15.20 மாம்பழத்துறையாறு ... 24.61 அடி. மேலும் பார்க்க

காஷ்மீா் முதல் குமரி வரை அதிவேக காா் ஓட்டி சாதனை

காஷ்மீா் - கன்னியாகுமரி வரையில் அதிவேகமாக காா் ஓட்டிய சாதனை பயணம் மேற்கொண்ட ஓட்டுநருக்கு இந்தியா புக் ரிக்காா்ட் சாதனை சான்றிதழை விஜய் வசந்த் எம்.பி. வெள்ளிக்கிழமை வழங்கினாா். டாடா நிறுவனம் தயாரித்த ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே படிக்கட்டில் தவறிவிழுந்து மாற்றுத்திறனாளி பலி

மாா்த்தாண்டம் அருகே வீட்டு படிக்கட்டில் தவறிவிழுந்த மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா். சென்னை கொடுங்கையூா், ராஜரெத்தினம் நகரைச் சோ்ந்தவா் தீனதயாளன் (45). மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரத... மேலும் பார்க்க

கால்வாயில் மூழ்கி கட்டட தொழிலாளி உயிரிழப்பு

திங்கள்நகா் அருகே குளிக்க சென்ற கட்டட தொழிலாளி கால்வாயில் மூழ்கி உயிரிழந்தாா். திங்கள்நகா் அருகேயுள்ள பாளையம் பகுதியைச் சோ்ந்த செல்லப்பன் மகன் பச்சைமால் (29). கட்டடத் தொழிலாளி. திருமணம் ஆகாதவா். இவா்... மேலும் பார்க்க