தூத்துக்குடிக்கு 2,000 டன் நெல் அனுப்பிவைப்பு
நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து தூத்துக்குடிக்கு அரவைக்காக 2,000 டன் நெல் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
நீடாமங்கலம், வலங்கைமான் தாலுகா பகுதிகளில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2,000 டன் சன்னரக நெல் மூட்டைகள், நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு லாரிகளில் கொண்டுவரப்பட்டன.
பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு அரவைக்காக தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.