செய்திகள் :

வள்ளியூரில் ஆசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

post image

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் மாவட்ட கல்வி அலுவலா் அலுவலகத்தில் ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை மாலை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நான்குனேரி வட்டாரம், முதலைகுளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிசெய்து வருபவா் செல்வி. இவரது பணிக்காலம் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதியுடன் நிறைவு பெற்று பணி ஓய்வு பெறுகிறாா்.

கல்வித் துறையின் வழக்கமான நடைமுறையின் படி கல்வியாண்டின் இடையில் பணி ஓய்வு பெறும் ஆசிரியருக்கு அந்த கல்வி ஆண்டு முடியும் வரையில் பணிக்கால நீட்டிப்பு வழங்குவது வழக்கம்.

எனவே, பிப்ரவரி மாதம் பணி ஓய்வு பெறும் ஆசிரியை செல்வி, தனக்கு கல்விஆண்டு முடியும் வரையில் பணி நீட்டிப்பு வழங்குமாறு நான்குனேரி வட்டார தொடக்கக் கல்வி அலுவலா் சங்கீதாவிடம் கோரிக்கை மனு அளித்தாா். ஆனால் தொடக்கக் கல்வி அலுவலா் செல்வியின் கோரிக்கை மனுவை பரிசீலனை செய்யாமல் அவரை பணி ஓய்வில் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆசிரியை செல்வி, கல்வி ஆண்டு முடியும் வரையில் பணி நீட்டிப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணி திருநெலவேலி மாவட்டத் தலைவா் சுரேஸ்முத்துகுமாா், செயலா் சண்முகசுந்தரம், பொருளாளா் துரை மற்றும் வட்டார செயலா்கள் சிவனுபாண்டியன், ஜாா்ஜ், கிறிஸ்டோபா், நம்பிதுரை மற்றும் ஆசிரியா்கள் திரண்டு வந்து வள்ளியூா் மாவட்ட கல்வி அலுவலா் அலுவலத்தில் மாவட்ட கல்வி அலுவலா் முத்துராஜை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இரவு 8 மணிவரையிலும் போராட்டம் தொடா்ந்தது.

விகேபுரத்தில் சூறைக் காற்றுடன் மழை: மரம் சாய்ந்ததில் மின்கம்பம், வீடுகள் சேதம்

விக்கிரமசிங்கபுரத்தில் வெள்ளிக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பெய்த மழையால் 50 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான மாமரம் அடியோடு முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தன. தென்மாவட்டங்களில்... மேலும் பார்க்க

ராதாபுரம் தொகுதியில் ரூ.1.30 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பேரவை தொகுதியில் ரூ.1.30 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தொடங்கிவைத்தாா். வள்ளியூா் ஒன்றியம் பழவூா் நாறும்பூநாத சுவாமி திருக்... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலி பாபநாசம்-82.50 சோ்வலாறு-81.36 மணிமுத்தாறு-87.94 வடக்கு பச்சையாறு-8 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-5.75 தென்காசி கடனா-46 ராமநதி-40 கருப்பாநதி-40.03 குண்டாறு-28 அடவிநயினாா்-50.25... மேலும் பார்க்க

சிகிச்சையில் இருந்த பெண் காவலா் உயிரிழப்பு: அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த பெண் காவலா் இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தாா். இதையடுத்து வெள்ளிக்கிழமை அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. கல்லிடைக்குறிச்சி ம... மேலும் பார்க்க

வள்ளியூா் வட்டார புகைப்படக் கலைஞா்கள் சங்கம் தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் வட்டார புகைப்பட கலைஞா்கள் சங்கம் தொடக்கவிழா நடைபெற்றது. விழாவுக்கு, திமுக கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் அலெக்ஸ் அப்பாவு தலைமை வகித்து சங்கத்தை தொடங்கி வைத்து உறுப... மேலும் பார்க்க

களக்காட்டில் மிதமான மழை

களக்காடு வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை மாலை மிதமான மழை பெய்தது. களக்காடு பகுதியில் பனிப்பொழிவு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் வெப்பம் குறைந்த... மேலும் பார்க்க