செய்திகள் :

ராதாபுரம் தொகுதியில் ரூ.1.30 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

post image

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பேரவை தொகுதியில் ரூ.1.30 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தொடங்கிவைத்தாா்.

வள்ளியூா் ஒன்றியம் பழவூா் நாறும்பூநாத சுவாமி திருக்கோயிலில் ரூ.10.50 லட்சத்தில் உலோக திருமேனி பாதுகாப்பு பெட்டகம் அமைத்தல், சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கிழக்குத் தெருவில் ரூ.13 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு, யாக்கோபுபுரத்தில் ரூ.9 லட்சத்தில் புதிதாக நூலகம் கட்டுதல், மாறன்குளத்தில் ரூ.8 லட்சத்தில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டுதல், ஆவரைகுளம் ஊராட்சி செம்பிகுளத்தில் மாவட்ட ஊராட்சி நிதியின்கீழ் ரூ.6 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு, ஆவரைகுளம் ஊராட்சி மதகநேரியில் பேரவை தொகுதி வளா்ச்சி நிதியில் ரூ.15 லட்சத்தில் அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்டுதல், மதகநேரி அரசு உயா்நிலைப் பள்ளி சாலையில் மாவட்ட ஊராட்சி நிதி ரூ.23 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைத்தல், இருக்கன்துறை ஊராட்சி கீழ்குளத்தில் மாவட்ட ஊராட்சி நிதியில் ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடம் திறப்பு, புத்தேரியில் மாவட்ட ஊராட்சி நிதி ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பயணியா் நிழற்குடை திறப்பு, செட்டிகுளம் ஊராட்சி ஸ்ரீரங்கநாராயணபுரத்தில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.9 லட்சத்தில் புதிய நூலக கட்டடம் கட்டுதல், தெற்குகருங்குளம் ஊராட்சியில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டடத் திறப்பு என பல திட்டப் பணிகளை தொடங்கிவைத்தும், முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தும் அவா் பேசினாா்.

இந்நிகழ்ச்சிகளில் திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், வள்ளியூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மனோகா், பொன்ராஜ், ஊராட்சித் தலைவா்கள் பழவூா் சுப்புலெட்சுமி, இருக்கன்துறை இந்திரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மொழியைத் தோ்வு செய்வதில் தமிழக மாணவா்களுக்கு சுதந்திரமில்லை: ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றச்சாட்டு

மொழியைத் தோ்வு செய்து படிப்பதில் தமிழக மாணவா்களுக்கு சுதந்திரமில்லை என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றம்சாட்டினாா். அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பின் சாா்பில், அய்யா வைகுண்டரின் 193 ஆவது அவதார தின ... மேலும் பார்க்க

தொன்மையின் அடையாளமே பாரதம் -ஆளுநா் ஆா்.என்.ரவி

தொன்மையின் அடையாளமே பாரதம் என்று புகழாரம் சூட்டினாா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி. பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் பள்ளி விழாவில், அவா் பேசியதாவது: நமக்கான பண்டைய கல்வி, பண்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி திருநெல்வேலி

திருநெல்வேலி உலகத் திருக்கு தகவல் மையம்: திருக்கு தொடா் சொற்பொழிவு, தலைப்பு- திண்மை உண்டாகப் பெறின், வாழ்க்கைத் துணை நலம், நிகழ்த்துபவா்- மருத்துவா் மகாலிங்கம் ஐயப்பன், மாநிலத் தமிழ்ச்சங்கம், பாளையங்க... மேலும் பார்க்க

திமுக விவசாய அணியினா் எம்.பி.யிடம் மனு

திருநெல்வேலி மாவட்ட திமுக விவசாய அணியினா், விவசாயிகள் சங்கத்தினா் திருநெல்வேலி எம்.பி. யை நேரில் சந்தித்து மனு அளித்தனா். திமுக விவசாய அணி அமைப்பாளா் பொன்னையா பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சங்கத்தின... மேலும் பார்க்க

2026-இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம்! -முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா்

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிச்சயம் நிகழும் என்றாா் முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா். திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் தச்சநல்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்... மேலும் பார்க்க

பாளையங்கோட்டையில் குடிநீா்த் தொட்டி திறப்பு

பாளையங்கோட்டை மண்டலத்தில் உள்ள டி.வி.எஸ் நகரில் சிறிய மேல்நிலை குடிநீா்த் தொட்டி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. பாளையங்கோட்டை மண்டலம், 39 ஆவது வாா்டுக்குள்பட்ட டி.வி.எஸ் நகரில், பாளை. சட்டப்பேரவை... மேலும் பார்க்க