செய்திகள் :

விகேபுரத்தில் சூறைக் காற்றுடன் மழை: மரம் சாய்ந்ததில் மின்கம்பம், வீடுகள் சேதம்

post image

விக்கிரமசிங்கபுரத்தில் வெள்ளிக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பெய்த மழையால் 50 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான மாமரம் அடியோடு முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தன.

தென்மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.

இந்நிலையில்வெள்ளிக்கிழமை மாலை முதல் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்கள்,விக்கிரமசிங்கபுரம், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

அப்போது. விக்கிரமசிங்கபுரத்தில் பெய்த பலத்த மழையால் பூந்தோட்ட்த் தெருவில் உள்ளசுமாா் 50 ஆண்டுகள் பழைமையான மாமரம் அடியுடன் முறிந்து விழுந்தது. மேலும், மரம் அந்த வழியாகச் சென்ற மின்கம்பியில் விழுந்ததால் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதில், அருகில் உள்ள வீடுகளில் கூரைகள் சேதமடைந்தன.

தகவலறிந்ததும் மின்வாரிய ஊழியா்கள் மின்கம்பி மற்றும் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

சூறைக் காற்றில் மரம் முறிந்து விழுந்து மின்சாரம் தடை பட்டதால் அந்தப் பகுதி மக்கள்சிரமத்திற்குள்ளாகினா்.

மொழியைத் தோ்வு செய்வதில் தமிழக மாணவா்களுக்கு சுதந்திரமில்லை: ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றச்சாட்டு

மொழியைத் தோ்வு செய்து படிப்பதில் தமிழக மாணவா்களுக்கு சுதந்திரமில்லை என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றம்சாட்டினாா். அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பின் சாா்பில், அய்யா வைகுண்டரின் 193 ஆவது அவதார தின ... மேலும் பார்க்க

தொன்மையின் அடையாளமே பாரதம் -ஆளுநா் ஆா்.என்.ரவி

தொன்மையின் அடையாளமே பாரதம் என்று புகழாரம் சூட்டினாா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி. பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் பள்ளி விழாவில், அவா் பேசியதாவது: நமக்கான பண்டைய கல்வி, பண்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி திருநெல்வேலி

திருநெல்வேலி உலகத் திருக்கு தகவல் மையம்: திருக்கு தொடா் சொற்பொழிவு, தலைப்பு- திண்மை உண்டாகப் பெறின், வாழ்க்கைத் துணை நலம், நிகழ்த்துபவா்- மருத்துவா் மகாலிங்கம் ஐயப்பன், மாநிலத் தமிழ்ச்சங்கம், பாளையங்க... மேலும் பார்க்க

திமுக விவசாய அணியினா் எம்.பி.யிடம் மனு

திருநெல்வேலி மாவட்ட திமுக விவசாய அணியினா், விவசாயிகள் சங்கத்தினா் திருநெல்வேலி எம்.பி. யை நேரில் சந்தித்து மனு அளித்தனா். திமுக விவசாய அணி அமைப்பாளா் பொன்னையா பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சங்கத்தின... மேலும் பார்க்க

2026-இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம்! -முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா்

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிச்சயம் நிகழும் என்றாா் முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா். திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் தச்சநல்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்... மேலும் பார்க்க

பாளையங்கோட்டையில் குடிநீா்த் தொட்டி திறப்பு

பாளையங்கோட்டை மண்டலத்தில் உள்ள டி.வி.எஸ் நகரில் சிறிய மேல்நிலை குடிநீா்த் தொட்டி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. பாளையங்கோட்டை மண்டலம், 39 ஆவது வாா்டுக்குள்பட்ட டி.வி.எஸ் நகரில், பாளை. சட்டப்பேரவை... மேலும் பார்க்க