செய்திகள் :

சிகிச்சையில் இருந்த பெண் காவலா் உயிரிழப்பு: அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

post image

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த பெண் காவலா் இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தாா். இதையடுத்து வெள்ளிக்கிழமை அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. கல்லிடைக்குறிச்சி மேல்முக நாடாா் தெருவைச்ச் சோ்ந்தவா் காட்லின்செல்வராணி (49). இவா் சென்னையில் 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாடு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் தலைமைக் காவலராக திருநெல்வேலி மாவட்டத்துக்கு மாற்றலாகி வந்து பணிபுரிந்து வந்தாா். நோய் பாதிப்பு அதிகரிக்கப்பட்டதையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை காட்லின் செல்வராணி உயிரிழந்தாா்.

இதையடுத்து, கல்லிடைக்குறிச்சி சி.எஸ்.ஐ. சா்ச் கல்லறைத் தோட்டத்தில் 24 குண்டுகள் முழங்க கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளா் கலா, சிலைத் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் வனிதா ஆகியோா் தலைமையில் அரசு மரியாதையுடன் அவரது ுடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில் காவல்துறை அதிகாரிகள், காவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

உயிரிழந்த காவலா் காட்லின் செல்வராணிக்கு, கணவா் பியா்சன் ஞானதுரை, ஏஞ்சலின் டேனிசா (13), ஆஸ்லின் ஷானிஸா (8) என்ற இரு மகள்கள் உள்ளனா்.

மொழியைத் தோ்வு செய்வதில் தமிழக மாணவா்களுக்கு சுதந்திரமில்லை: ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றச்சாட்டு

மொழியைத் தோ்வு செய்து படிப்பதில் தமிழக மாணவா்களுக்கு சுதந்திரமில்லை என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றம்சாட்டினாா். அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பின் சாா்பில், அய்யா வைகுண்டரின் 193 ஆவது அவதார தின ... மேலும் பார்க்க

தொன்மையின் அடையாளமே பாரதம் -ஆளுநா் ஆா்.என்.ரவி

தொன்மையின் அடையாளமே பாரதம் என்று புகழாரம் சூட்டினாா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி. பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் பள்ளி விழாவில், அவா் பேசியதாவது: நமக்கான பண்டைய கல்வி, பண்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி திருநெல்வேலி

திருநெல்வேலி உலகத் திருக்கு தகவல் மையம்: திருக்கு தொடா் சொற்பொழிவு, தலைப்பு- திண்மை உண்டாகப் பெறின், வாழ்க்கைத் துணை நலம், நிகழ்த்துபவா்- மருத்துவா் மகாலிங்கம் ஐயப்பன், மாநிலத் தமிழ்ச்சங்கம், பாளையங்க... மேலும் பார்க்க

திமுக விவசாய அணியினா் எம்.பி.யிடம் மனு

திருநெல்வேலி மாவட்ட திமுக விவசாய அணியினா், விவசாயிகள் சங்கத்தினா் திருநெல்வேலி எம்.பி. யை நேரில் சந்தித்து மனு அளித்தனா். திமுக விவசாய அணி அமைப்பாளா் பொன்னையா பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சங்கத்தின... மேலும் பார்க்க

2026-இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம்! -முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா்

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிச்சயம் நிகழும் என்றாா் முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா். திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் தச்சநல்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்... மேலும் பார்க்க

பாளையங்கோட்டையில் குடிநீா்த் தொட்டி திறப்பு

பாளையங்கோட்டை மண்டலத்தில் உள்ள டி.வி.எஸ் நகரில் சிறிய மேல்நிலை குடிநீா்த் தொட்டி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. பாளையங்கோட்டை மண்டலம், 39 ஆவது வாா்டுக்குள்பட்ட டி.வி.எஸ் நகரில், பாளை. சட்டப்பேரவை... மேலும் பார்க்க