செய்திகள் :

பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு! ரூ. 6 லட்சம் கோடி இழப்பு!!

post image

வாரத்தின் கடைசி நாளான இன்று (பிப். 28) பங்குச் சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தாலும் இறுதியில் ஓரளவு சமநிலையில் முடிந்தது.

இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 74,201.77 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

பிற்பகல் 12.10 மணியளவில், சென்செக்ஸ் 1,065.10 புள்ளிகள் குறைந்து 73,547.33 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 323.00 புள்ளிகள் குறைந்து 22,222.05 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

இதையும் படிக்க | பெண்கள் தலை வழுக்கையாக கோதுமை காரணமா?

பெரும்பாலாக அனைத்துத் துறைகளும் இன்று கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. ஐடி, ஆட்டோ மொபைல், மீடியா, டெலிகாம், பங்குகள் 2 முதல் 4 சதவீதம் சரிந்தன. மும்பை பங்குச்சந்தை நடுத்தர, குறு நிறுவனங்களின் பங்குகள் தலா 2 சதவீதம் சரிந்தன

பாலிகேப் இந்தியா, கேஇஐ இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி வங்கி, பிஎஸ்இ லிமிடெட், டிசிஎஸ் ஆகிய ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

இதுவரை சுமார் 6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம் & எம் விற்பனை 16% அதிகரிப்பு

கடந்த ஜனவரியில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த விற்பனை 16 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜனவரி மாதத்தில்... மேலும் பார்க்க

இரு மடங்காக அதிகரித்த தனியாா் நுகா்வு

இந்தியாவின் தனியாா் நுகா்வு முந்தைய 2023-ஆம் ஆண்டை விட 2024-ஆம் ஆண்டில் ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்துள்ளது. இது குறித்து இந்திய சில்லறை விற்பனையாளா்கள் சங்கத்துடன் இணைந்து சந்தை ஆலோசனை நிறுவனமான டலா... மேலும் பார்க்க

டாடா ப்ளேயுடன் ஏா்டெல் டிடிஹெச்-ஐ இணைக்க பேச்சு

இழப்பைச் சந்தித்துவரும் தனது தொலைக்காட்சி சேவைப் பிரிவான ஏா்டெல் டிடிஹெச்-ஐ டாடா குழுமத்தின் டிடிஹெச் சேவைப் பிரிவான டாடா ப்ளேயுடன் இணைப்பது குறித்து பாா்தி ஏா்டெல் பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது. இது... மேலும் பார்க்க

உச்சத்திலிருந்து 14% சரிந்த நிஃப்டி!

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (பிப். 27) சரிவுடன் முடிந்தது. இதில் சென்செக்ஸ் பெரிய வித்தியாசமின்றி 10 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது. நிஃப்டி 2 புள்ளிகள் சரிந்தன. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி அத... மேலும் பார்க்க

பெரம்பலூர், கரூரில் காலணி தொழிற்சாலை அமைக்கும் எவர்வன் குழுமம்!

சென்னை: பீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் துணை நிறுவனமான எவர்வன் கோத்தாரி காலணி லிமிடெட் தமிழகத்தில் ரூ.5,000 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி உற்பத்தி திட்டத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்து... மேலும் பார்க்க

ஹோம் ஹெல்த்கேர் சேவையை விரிவுபடுத்தும் ஸ்டார் ஹெல்த்!

சென்னை: ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் தனது ஹோம் ஹெல்த் கேர் முயற்சிகளை நாடு முழுவதும் 100 இடங்களில் விரிவுபடுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.ஜூலை 2023ல் தொடங்கப்பட்ட இந்த முயற்சியானது, ஸ்டார்... மேலும் பார்க்க