செய்திகள் :

உ.பி. முழுவதும் கொண்டு செல்லப்படும் கும்பமேளா நீர்!

post image

மகா கும்பமேளாவில் பங்கேற்க முடியாத மக்களுக்காக மாநிலம் முழுவதும் புனித நீரைக் கொண்டு செல்வப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜன. 13 முதல் பிப். 26 வரை 45 நாள்கள் மகா கும்பமேளா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் 66 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் புனித நீராடினர்.

இதையும் படிக்க : கும்பமேளா: லாபம் குவித்த 'இன்ஸ்டன்ட்' தொழில்கள்!

இந்த நிலையில், கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியாத உத்தரப் பிரதேச மக்களுக்காக 75 மாவட்டங்களுக்கும் திரிவேணி சங்கமத்தில் இருந்து புனித நீரைக் கொண்டு செல்ல முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

கும்பமேளாவுக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 365 தீயணைப்புத் துறையினரின் வாகனங்கள் மூலம் புனித நீர் கொண்டு செல்லப்படுகிறது.

கடந்த புதன்கிழமையுடன் கும்பமேளா முடிவடைந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வெள்ளிக்கிழமை திரும்பச் செல்கிறது.

இந்த வாகனங்கள் மூலம் திரிவேணி சங்கமத்தில் இருந்து புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவாவில் ராட்சத அலையில் சிக்கிய ரஷியாவைச் சேர்ந்த 4 பேர் மீட்பு

கோவாவில் ராட்சத அலையில் சிக்கிய ரஷியாவைச் சேர்ந்த 4 பேர் பத்திரமாக மீட்டகப்பட்டனர். வடக்கு கோவாவில் உள்ள மேன்டிரம் கடற்கரையில் ரஷிய நாட்டினர் வியாழக்கிழமை பிற்பகல் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது தி... மேலும் பார்க்க

ராய்காட் கடற்கரையில் மீன்பிடி படகு தீப்பிடித்தது: 18 பணியாளர்கள் மீட்பு!

மகாராஷ்டிரம் ராய்காட் கடற்கரையில் தீப்பிடித்த மீன்பிடி படகில் இருந்த 18 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் அக்ஷி கடற்கரையில் சுமார் 6 - 7 கடல் மைல் தொலைவில் ராகேஷ... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 57 தொழிலாளர்கள்!

உத்தரகண்ட்டில் ஏற்பட்டுள்ள பனிச்சரிவில் சிக்கிய 57 தொழிலாளர்களில் 16 பேர் மீட்கப்பட்டனர். உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திலுள்ள மனா என்கிற உயரமான எல்லைக் கிராமத்தில் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்தப... மேலும் பார்க்க

'பெண்களின் தலை வழுக்கையானதற்கு கோதுமை காரணமல்ல' - விவசாயிகள் மறுப்பு!

மகாராஷ்டிரத்தில் புல்தானா மாவட்ட மக்களின் முடி உதிர்தல் பிரச்னைக்கு கோதுமை காரணமல்ல என்று பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் கூறியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களைச் சேர்ந... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய ஆணையத் தலைவர் சந்திப்பு!

இந்தியா வந்துள்ள ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்டர் லியனை பிரதமர் மோடி வரவேற்றார். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வாண்டர் லியன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தேசிய தலைநகரில் உள்ள... மேலும் பார்க்க

கொல்கத்தா கொடூரம்: நடந்தது என்ன? சிறுவன் வாக்குமூலம்!

கொல்கத்தாவில், சகோதரர்களின் மனைவிகள் மற்றும் ஒரு மகள் மரணமடைந்து, சகோதரர்கள் மற்றும் ஒரு மகன் விபத்தில் படுகாயமடைந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக, சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.14 வயது பிரதீப் தே... மேலும் பார்க்க