செய்திகள் :

அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா; வெளியேறியது ஆப்கானிஸ்தான்!

post image

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா முன்னேறியது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தன. குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், குருப் பி பிரிவில் ஆஸ்திரேலிய அணியும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தன. இந்த நிலையில், தற்போது 4-வது மற்றும் கடைசி அணியாக தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

இதையும் படிக்க: ரிஷப் பந்த் விளையாடாதது மிகவும் கடினமாக இருக்கிறது: இந்திய அணியின் பயிற்சியாளர்

தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும் என தெரிந்திருந்தபோதிலும், தற்போது தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இன்றையப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கு ஆப்கானிஸ்தான் அணிக்கு இருந்த மிக மிக அரிதான வாய்ப்பை அந்த அணி இழந்தது. இதன் மூலம், தென்னாப்பிரிக்க அணி 4-வது மற்றும் கடைசி அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்யும் பட்சத்தில், தென்னாப்பிரிக்காவை இங்கிலாந்து அணி, குறைந்தது 207 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்ற சூழல் இருந்தது.

ஆனால், இன்றையப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், ஆப்கானிஸ்தானுக்கு அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கு இருந்த மிக மிக அரிதான வாய்ப்பு பறிபோனது.

தென்னாப்பிரிக்கா அபாரம்; இங்கிலாந்துக்கு ஹாட்ரிக் தோல்வி!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கராச்சியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில்... மேலும் பார்க்க

ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் சாதனை!

ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்காக அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கராச்சியில் நடைபெற்று வரும் இன்றையப்... மேலும் பார்க்க

கேப்டனாக ஜோஸ் பட்லருக்கு கடைசி போட்டி; 179 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கராச்சியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து ம... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் விளையாடாதது மிகவும் கடினமாக இருக்கிறது: இந்திய அணியின் பயிற்சியாளர்

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரிஷப் பந்த் விளையாட முடியாதது மிகவும் கடிமனமாக இருப்பதாக அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டொஸ்சாட் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இ... மேலும் பார்க்க

நியூசி.க்கு எதிரான போட்டியில் முகமது ஷமிக்கு பதில் அர்ஷ்தீப் சிங் விளையாடுகிறாரா?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்ற... மேலும் பார்க்க

ஆஸி.யின் தொடக்க ஆட்டக்காரருக்கு காயம்; அரையிறுதியில் விளையாடுவாரா?

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் அரையிறுதிப் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது... மேலும் பார்க்க