செய்திகள் :

பங்குச் சந்தை: எழுச்சிக்குப் பிறகு வீழ்ச்சி!

post image

இந்திய பங்குச் சந்தை வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை எழுச்சியுடன் தொடங்கிய நிலையில், தற்போது வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் வெளியேறுவதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது.

கடந்த வார இறுதியில் சென்செக்ஸ் மற்றும் மும்பை பங்குச்சந்தை சரிவைக் கண்ட நிலையில், ஐடி, ஆட்டோ மொபைல், மீடியா, டெலிகாம், பங்குகள் 2 முதல் 4 சதவீதம் சரிந்தன. சுமார் 6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று காலை சென்செக்ஸ் 451.62 புள்ளிகள் உயர்ந்து 73,649.72 ஆக விற்பனையானது.

அதேபோல், நிஃப்டி 136.85 புள்ளிகள் உயர்ந்து 22,261.55 ஆக இருந்தது.

இதையும் படிக்க : பங்குச்சந்தை மோசடி: மாதவி புரி புச் மீது நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு!

ஆனால், சிறிது நேரத்தில் இந்திய பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவைக் கண்டன. பகல் 12.50 மணியளவில் சென்செக்ஸ் 73,191.10 ஆகவும், நிஃப்டி 22,123.95 ஆகவும் விற்பனை ஆகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி பங்குகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறியதால் திடீர் சரிவைக் கண்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இண்டஸ்இண்ட் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பின்சர்வ், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், ஜொமாடோ, பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய பங்குகள் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளன.

ஸ்கைப் சேவை நிறுத்தம்! பயனர்களுக்காக மைக்ரோசாஃப்ட் ஏற்படுத்திய வசதி!

ஸ்கைப் இணையதளப் பக்கம் மே 5ஆம் தேதி முதல் நிறுத்தப்படவுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கு மாற்றாக புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட டீம்ஸ் என்ற செயலியை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவு... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்வு! ரூ. 87.34

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (மார்ச் 3) 3 காசுகள் உயர்ந்து ரூ. 87.34 காசுகளாக நிறைவு பெற்றது.வணிக நாளான கடந்த வெள்ளிக்கிழமை (பிப். 28) 19 காசுகள் சரிந்து ரூ. 87.37 காசுகளாக இர... மேலும் பார்க்க

பங்குச் சந்தை சரிவுடன் முடிவு! மீடியா, வங்கித் துறை பங்குகள் வீழ்ச்சி!

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (மார்ச் 3) இந்திய பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 112 புள்ளிகளும் நிஃப்டி பெரிய மாற்றங்களின்றி 5 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது. மேலும் பார்க்க

ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் ​​8.25% ஆக நிர்ணயம்!

புதுதில்லி: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2024-25 நிதியாண்டுக்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.25% ஆக நிர்ணயம். பிப்ரவரி 2024ல், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ம... மேலும் பார்க்க

சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி மற்றும் கேலக்ஸி எம்06 5ஜி இந்தியாவில் அறிமுகம்!

ஹைதராபாத்: சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்16 5ஜி மற்றும் கேலக்ஸி எம்06 5ஜி ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கேலக்ஸி எம் தொடரின் இந்த சமீபத்திய வடிவமைப்புகள், சக்திவாய... மேலும் பார்க்க

கோதுமை கொள்முதல்: 31 மில்லியன் டன் இலக்கு நிர்ணயம்!

புதுதில்லி: 2025-26 ஏப்ரல் முதல் தொடங்கும் ரபி பருவத்தில் 31 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்து சந்தைப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.2024-25 பயிர் ஆண்டு அதாவது ஜூலை முதல் ஜூன் வரை, 115... மேலும் பார்க்க