செய்திகள் :

இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன? நியூசி. வேகப் பந்துவீச்சாளர் பதில்!

post image

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றி பேசியுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடைசி குரூப் ஸ்டேஜ் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்திய அணியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.

இதையும் படிக்க: வருண் சக்கரவர்த்தி தாக்கத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்: ரவி சாஸ்திரி

தோல்விக்கு காரணம் என்ன?

துபை ஆடுகளங்களின் தன்மையை அறிந்து இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்தியது நியூசிலாந்து அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியதாக அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி அந்த அணியில் 4 சுழற்பந்துவீச்சாளர்களை திறம்பட பயன்படுத்தியதாக நினைக்கிறேன். துபை ஆடுகளங்களின் தன்மையை நன்கு அறிந்திருந்தது இந்திய அணிக்கு சாதகமாக இருந்தது. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப அவர்கள் மிகவும் அற்புதமாக விளையாடினார்கள். அதுவே எங்களுக்கு சவாலானதாக அமைந்தது.

இதையும் படிக்க: இரண்டு அணிகளுக்கும் அழுத்தம் இருக்கும்; அரையிறுதி குறித்து ரோஹித் சர்மா பேச்சு!

இந்திய அணி நான்கு சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கப் போகிறது என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் நன்றாக பந்துவீசினார்கள். அவர்கள் ஆடுகளத்தின் தன்மை மற்றும் போட்டியின் சூழலை நன்கு உணர்ந்து செயல்பட்டனர். அதன் காரணமாக, எங்களால் வெற்றி பெற முடியவில்லை என்றார்.

நியூசிலாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது சவாலானது: ஸ்டீவ் ஸ்மித்

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது சவாலானது என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளத... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவை உருவகேலி செய்து சமூக வலைதளப் பதிவு: பிசிசிஐ எதிர்வினை!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷாமா முகமது சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டிருப்பதே இந்திய அளவில் இன்றைய முன்னணி தலைப்புச் செய்திகளில் ஒன்றாக வல... மேலும் பார்க்க

வருண் சக்கரவர்த்தி தாக்கத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்: ரவி சாஸ்திரி

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதி போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் குரூப் ஸ்டேஜ் போட்டிகள... மேலும் பார்க்க

இரண்டு அணிகளுக்கும் அழுத்தம் இருக்கும்; அரையிறுதி குறித்து ரோஹித் சர்மா பேச்சு!

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இரண்டு அணிகளுக்கும் அழுத்தம் இருக்குமென இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியு... மேலும் பார்க்க

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே நியமனம்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்த... மேலும் பார்க்க