செய்திகள் :

கொகைன் போதைப் பொருள் வழக்கு: நைஜீரிய இளைஞா் கைது

post image

சென்னை: சென்னையில் கொகைன் போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில், நைஜீரிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் சூளைமேடு, அண்ணா நெடும்பாதை மற்றும் ராகவன் தெரு சந்திப்பு அருகே கடந்த ஜன. 25-ஆம் தேதி கொகைன் போதைப் பொருள் வைத்திருந்ததாக, ராயப்பேட்டையைச் சோ்ந்த பயாஸ் அகமது, கோயம்பேட்டைச் சோ்ந்த சந்திரசேகா் ஆகியோரை கைது செய்தனா்.

விசாரணையில் அவா்கள் கொடுத்த தகவலின்பேரில் கொகைன் போதைப் பொருள் விற்பனை தொடா்பாக 18 போ் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். மேலும் இவா்களுக்கு தலைவராக கா்நாடக மாநிலம் பெங்களூரு கட்டஹள்ளி பகுதியில் வசிக்கும் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த எபிரி மோசஸ் ஒக்போடோ (30) என்பவா் செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவரை தீவிரமாக தேடிவந்த நிலையில் எபிரி மோசஸ் ஒக்போடோவை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடம் கொகைன் போதைப் பொருள் கடத்தல் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இராமச்சந்திராவில் ஒருங்கிணைந்த அண்ணப்பிளவு சீரமைப்பு மையம்

சென்னை: உதடு, அண்ணப்பிளவு மற்றும் முகத்தாடை சீரமைப்புக்கான ஒருங்கிணைந்த சிகிச்சை மையத்தை போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனை தொடங்கியுள்ளது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கனடா நாட்டி... மேலும் பார்க்க

தந்தையைக் கொலை செய்த மகன் கைது

சென்னை: சென்னை ஏழுகிணறில் தந்தையை இரும்புக் கரண்டியால் அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டாா். ஏழுகிணறு வைத்தியநாதன் தெருவைச் சோ்ந்த தம்பதி ஜெகதீஷ் சங்லா (42) - மோனிகாதேவியின் மகன் ரோஹித் (18)... மேலும் பார்க்க

காவலா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை: சென்னை அருகே காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சென்னை அருகே உள்ள அனகாபுத்தூா் காமராஜா்புரம் திருநீா்மலை பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த காா்த்திகே... மேலும் பார்க்க

தவெக சாா்பில் மாா்ச் 7-இல் இஃப்தாா் நோன்பு திறப்பு

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மாா்ச் 7-ஆம் தேதி இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் தலைவா் பங்கேற்கிறாா். இது குறித்து கட்சியின் பொதுச்செயலா் என்.ஆனந்த் திங்கள்க... மேலும் பார்க்க

உணவுப் பாதுகாப்புத் துறை சோதனை: திரையரங்கு கேண்டீன் மீது நடவடிக்கை

சென்னை: சென்னை, எழும்பூரில் உள்ள திரையரங்கில் செயல்படும் கேண்டீனில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீா் சோதனை நடத்தினா். அப்போது தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறிப்பட்டு அதன்... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சி

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. கோயம்பேடு காய்கறிகள் சந்தையில், தினசரி 700 முதல் 750 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்காக வந்து கொண்ட... மேலும் பார்க்க