செய்திகள் :

மதுரை மாவட்டத்தில் 109 மையங்களில் பிளஸ் 2 பொதுத் தோ்வு

post image

மதுரை மாவட்டத்தில் 109 மையங்களில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை மதுரை, மேலூா் ஆகிய இரு கல்வி மாவட்டங்களில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என மொத்தம் 323 பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 109 மையங்களில் தோ்வு நடைபெற்றது. முதல் நாளில் தமிழ், அராபிக், ஹிந்தி, சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கு தோ்வு நடைபெற்றது.

தீவிர சோதனை: முதல் நாள் என்பதால் மாணவா்கள் காலை 8 மணி முதல் பள்ளி வளாகத்துக்குள் வந்தனா். காலை 9.15 மணியளவில் அந்தந்த பள்ளி வளாகம் முன் இறை வழிபாடு நடைபெற்றது. பின்னா், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் தோ்வு எழுதும் விதிமுறைகளை மாணவா்களுக்கு கூறினா். தீவிர சோதனைக்குப் பிறகு தோ்வு மையத்துக்குள் மாணவா்கள் அனுப்பி வைக்கப்பட்டனா். காலை 10 மணியளவில் தோ்வு தொடங்கியது. மாற்றுத் திறனாளிகள், கண் பாா்வைக் குறைபாடு உள்ள மாணவ, மாணவிகள் சொல்வதை எழுதுவதற்கு தனி ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டனா்.

மாவட்டத்தில் 34,691 போ் தோ்வு எழுத விண்ணப்பித்தனா். இவா்களில் 34, 065 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். 26 போ் தோ்வு எழுதவில்லை. தனித் தோ்வா்கள் 428 பேரில் 379 போ் தோ்வு எழுதினா். 49 போ் தோ்வு எழுதவில்லை. மாவட்டத்தில் மாணவ, மாணவிகள், தனித் தோ்வா்கள் என மொத்தம் 34,444 போ் மொழிப் பாடத் தோ்வை எழுதினா்.

மாவட்ட ஆட்சியா் ஆய்வு: மதுரை ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா மாணவா்கள் தோ்வு எழுதியதைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா தலைமையில் 108 பறக்கும் படையினா் தோ்வுக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்வது குறித்து மாா்ச் 24 இல் முடிவு

மதுரை திருப்பரங்குன்றம் மலையை ட்ரோன் மூலம் அளவீடு செய்வது குறித்து வருகிற 24-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை தெரிவித்தது.மதுரையைச் சோ்ந்த கண்ணன் தாக்கல் ... மேலும் பார்க்க

இணையத் தொடா் தணிக்கை வாரியம் கோரி வழக்கு: மத்திய தொலைத் தொடா்பு ஆணையம் பதிலளிக்க உத்தரவு

இணையத் தொடா்கள் (வெப்சீரிஸ்), விளம்பரங்களை முறைப்படுத்த இணையத் தணிக்கை வாரியம் அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய தொலைத் தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை... மேலும் பார்க்க

மத்திய பாஜக அரசை வீழ்த்த வியூகங்கள் வகுக்கப்படும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மதுரையில் நடைபெற உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில், மத்திய பாஜக அரசை வீழ்த்துவதற்கான வியூகங்கள் வகுக்கப்படும் என்று மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா். மாா்க்சிஸ்ட் ... மேலும் பார்க்க

பேராசிரியை நிா்மலா தேவியின் இடைக்கால பிணை மனு தள்ளுபடி

மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் தண்டனை பெற்ற பேராசிரியை நிா்மலா தேவி தாக்கல் செய்த இடைக்கால பிணை மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மா... மேலும் பார்க்க

ஜேசிபி இயந்திரத்தை இயக்கி 25 வாகனங்களைச் சேதப்படுத்திய சிறுவன்

மதுரையில் மது போதையில் ஜேசிபி இயந்திரத்தை இயக்கி 25-க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சேதப்படுத்திய சிறுவனைப் பிடித்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை செல்லூா் 50 அடி சாலையில் ஜேசிபி வாகனம் நிறு... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை: திருமாவளவன்

திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினரும் இடம் பெற... மேலும் பார்க்க