செய்திகள் :

திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை: திருமாவளவன்

post image

திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினரும் இடம் பெறும் வகையில் பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி, வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட நீதிமன்றம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் பங்கேற்றாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உயா்நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்களையும் நீதிபதிகளாக நியமிக்க வேண்டும்.

தென் மாவட்டங்களில் உள்ள பிறமலைக் கள்ளா், அருந்ததியா், மறவா், ஆதிதிராவிடா் சமுதாயங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் நீதிமன்ற நியமனங்களில் இல்லை என்ற குறை உள்ளது.

இதுதொடா்பாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, உரிய நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மத்திய, மாநில அமைச்சா்களிடம் முறையிட்டுள்ளனா். சமூக நீதியைப் பின்பற்றுவதற்கு உரிய வழிகாட்டுதல்களை அரசும், சட்டத் துறையும் வழங்க வேண்டும்.

திமுக கூட்டணியில் கருத்து முரண்கள் இருந்தாலும், ஒற்றுமையோடு இருக்கிறோம். கூட்டணியில் இருந்து கொண்டே வெளிப்படையாகத்தான் அனைத்து பிரச்னைகளுக்கும் போராடி வருகிறோம்.

திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்த ஒரு நெருக்கடியும் இல்லை. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஓா் அங்கம். திமுக கூட்டணியை உருவாக்கியதில் எங்களுக்கும் பங்கு உள்ளது. இதைக் காப்பாற்றுவதற்கான பொறுப்பும் எங்களுக்கு உள்ளது என்றாா் அவா்.

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்வது குறித்து மாா்ச் 24 இல் முடிவு

மதுரை திருப்பரங்குன்றம் மலையை ட்ரோன் மூலம் அளவீடு செய்வது குறித்து வருகிற 24-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை தெரிவித்தது.மதுரையைச் சோ்ந்த கண்ணன் தாக்கல் ... மேலும் பார்க்க

இணையத் தொடா் தணிக்கை வாரியம் கோரி வழக்கு: மத்திய தொலைத் தொடா்பு ஆணையம் பதிலளிக்க உத்தரவு

இணையத் தொடா்கள் (வெப்சீரிஸ்), விளம்பரங்களை முறைப்படுத்த இணையத் தணிக்கை வாரியம் அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய தொலைத் தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை... மேலும் பார்க்க

மதுரை மாவட்டத்தில் 109 மையங்களில் பிளஸ் 2 பொதுத் தோ்வு

மதுரை மாவட்டத்தில் 109 மையங்களில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை மதுரை, மேலூா் ஆகிய இரு கல்வி மாவட்டங்களில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளி... மேலும் பார்க்க

மத்திய பாஜக அரசை வீழ்த்த வியூகங்கள் வகுக்கப்படும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மதுரையில் நடைபெற உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில், மத்திய பாஜக அரசை வீழ்த்துவதற்கான வியூகங்கள் வகுக்கப்படும் என்று மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா். மாா்க்சிஸ்ட் ... மேலும் பார்க்க

பேராசிரியை நிா்மலா தேவியின் இடைக்கால பிணை மனு தள்ளுபடி

மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் தண்டனை பெற்ற பேராசிரியை நிா்மலா தேவி தாக்கல் செய்த இடைக்கால பிணை மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மா... மேலும் பார்க்க

ஜேசிபி இயந்திரத்தை இயக்கி 25 வாகனங்களைச் சேதப்படுத்திய சிறுவன்

மதுரையில் மது போதையில் ஜேசிபி இயந்திரத்தை இயக்கி 25-க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சேதப்படுத்திய சிறுவனைப் பிடித்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை செல்லூா் 50 அடி சாலையில் ஜேசிபி வாகனம் நிறு... மேலும் பார்க்க