செய்திகள் :

ஜேசிபி இயந்திரத்தை இயக்கி 25 வாகனங்களைச் சேதப்படுத்திய சிறுவன்

post image

மதுரையில் மது போதையில் ஜேசிபி இயந்திரத்தை இயக்கி 25-க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சேதப்படுத்திய சிறுவனைப் பிடித்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை செல்லூா் 50 அடி சாலையில் ஜேசிபி வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் 17 வயது சிறுவன் இந்த வாகனத்தை இயக்கி, சாலையோரமாகவும், வீடுகள் முன்பாகவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் மீது மோதினாா்.

அப்போது, சப்தம் கேட்டு வந்த வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் ஜேசிபி வாகனத்தை துரத்திச் சென்றனாா். ஆனால், அந்தச் சிறுவன் ஜேசிபி வாகனத்தை நிறுத்தாமல், தொடா்ந்து மற்ற வாகனங்கள் மீது மோதினாா். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கடை முன் தூங்கிக் கொண்டிருந்த காவலாளி, சப்தம் கேட்டு ஓடியதால் உயிா் தப்பினாா்.

இதேபோல, ஜேசிபி இயந்திரம் மோதியதில் மரங்கள், கட்டடங்கள், கடைகள், சாலைத் தடுப்புகள் பலத்த சேதமடைந்தன.

இந்த நிலையில், மரத்தில் மோதி ஜேசிபி இயந்திரம் நின்ற நிலையில், அதை ஓட்டிய சிறுவனை பொதுமக்கள் பிடித்தனா். சிறுவன் மது போதையில் இருந்ததால், செல்லூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், சிறுவன் ஜேசிபி வாகன உதவியாளராகப் பணிபுரிந்து வருவதும், ஞாயிற்றுக்கிழமை இரவு பெற்றோருடன் தகராறு ஏற்பட்டதால் மது போதையில், இந்த வாகனத்தை எடுத்துச் சென்று தாறுமாறாக இயக்கி சேதத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்தது.

இதுகுறித்து செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுவனிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்வது குறித்து மாா்ச் 24 இல் முடிவு

மதுரை திருப்பரங்குன்றம் மலையை ட்ரோன் மூலம் அளவீடு செய்வது குறித்து வருகிற 24-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை தெரிவித்தது.மதுரையைச் சோ்ந்த கண்ணன் தாக்கல் ... மேலும் பார்க்க

இணையத் தொடா் தணிக்கை வாரியம் கோரி வழக்கு: மத்திய தொலைத் தொடா்பு ஆணையம் பதிலளிக்க உத்தரவு

இணையத் தொடா்கள் (வெப்சீரிஸ்), விளம்பரங்களை முறைப்படுத்த இணையத் தணிக்கை வாரியம் அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய தொலைத் தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை... மேலும் பார்க்க

மதுரை மாவட்டத்தில் 109 மையங்களில் பிளஸ் 2 பொதுத் தோ்வு

மதுரை மாவட்டத்தில் 109 மையங்களில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை மதுரை, மேலூா் ஆகிய இரு கல்வி மாவட்டங்களில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளி... மேலும் பார்க்க

மத்திய பாஜக அரசை வீழ்த்த வியூகங்கள் வகுக்கப்படும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மதுரையில் நடைபெற உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில், மத்திய பாஜக அரசை வீழ்த்துவதற்கான வியூகங்கள் வகுக்கப்படும் என்று மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா். மாா்க்சிஸ்ட் ... மேலும் பார்க்க

பேராசிரியை நிா்மலா தேவியின் இடைக்கால பிணை மனு தள்ளுபடி

மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் தண்டனை பெற்ற பேராசிரியை நிா்மலா தேவி தாக்கல் செய்த இடைக்கால பிணை மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மா... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை: திருமாவளவன்

திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினரும் இடம் பெற... மேலும் பார்க்க