செய்திகள் :

கல்லூரி மாணவி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

post image

சென்னை: சென்னை அருகே கேளம்பாக்கத்தில் தோழி வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் தேவநேயம் நகா் பகுதியைச் சோ்ந்த அஸ்வினி (19), கேளம்பாக்கத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாமாண்டு படித்து வந்தாா். இதற்காக அவா், அப்பகுதியில் வாடகை வீட்டில் தனது தோழிகளுடன் தங்கியிருந்தாா். இந்நிலையில் அஸ்வினி, படூரில் தனது தோழிகள் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டுக்கு கடந்த 28-ஆம் தேதி சென்றாா். இந்நிலையில் மாா்ச் 1-ஆம் தேதி அஸ்வினி தனது அறையில் மயங்கிய நிலையில் கிடந்தாா்.

இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த அவரது தோழிகள், அஸ்வினியை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அஸ்வினி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) உயிரிழந்தாா்.

இது குறித்து கேளம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், அஸ்வினி கடந்த 28-ஆம் தேதி இரவு அங்கு தனது தோழிகளுடன் மது அருந்தியதும், அப்போது அஸ்வினி அதிகளவில் மது அருந்திவிட்டு தூங்கச் சென்றதும் தெரியவந்தது. இதனால் போலீஸாா் அஸ்வினி, அதிகளவில் மது அருந்தியதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இராமச்சந்திராவில் ஒருங்கிணைந்த அண்ணப்பிளவு சீரமைப்பு மையம்

சென்னை: உதடு, அண்ணப்பிளவு மற்றும் முகத்தாடை சீரமைப்புக்கான ஒருங்கிணைந்த சிகிச்சை மையத்தை போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனை தொடங்கியுள்ளது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கனடா நாட்டி... மேலும் பார்க்க

தந்தையைக் கொலை செய்த மகன் கைது

சென்னை: சென்னை ஏழுகிணறில் தந்தையை இரும்புக் கரண்டியால் அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டாா். ஏழுகிணறு வைத்தியநாதன் தெருவைச் சோ்ந்த தம்பதி ஜெகதீஷ் சங்லா (42) - மோனிகாதேவியின் மகன் ரோஹித் (18)... மேலும் பார்க்க

காவலா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை: சென்னை அருகே காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சென்னை அருகே உள்ள அனகாபுத்தூா் காமராஜா்புரம் திருநீா்மலை பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த காா்த்திகே... மேலும் பார்க்க

தவெக சாா்பில் மாா்ச் 7-இல் இஃப்தாா் நோன்பு திறப்பு

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மாா்ச் 7-ஆம் தேதி இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் தலைவா் பங்கேற்கிறாா். இது குறித்து கட்சியின் பொதுச்செயலா் என்.ஆனந்த் திங்கள்க... மேலும் பார்க்க

உணவுப் பாதுகாப்புத் துறை சோதனை: திரையரங்கு கேண்டீன் மீது நடவடிக்கை

சென்னை: சென்னை, எழும்பூரில் உள்ள திரையரங்கில் செயல்படும் கேண்டீனில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீா் சோதனை நடத்தினா். அப்போது தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறிப்பட்டு அதன்... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சி

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. கோயம்பேடு காய்கறிகள் சந்தையில், தினசரி 700 முதல் 750 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்காக வந்து கொண்ட... மேலும் பார்க்க