செய்திகள் :

சென்னை மாநகரப் பேருந்துகளில் 67.80 கோடி மின்னணு பயணச்சீட்டுகள் விநியோகம்

post image

சென்னை: சென்னை மாநகரப் பேருந்துகளில் ஒரு ஆண்டில் 67.80 கோடி மின்னணு பயணச்சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.

சென்னை மாநகரப் பேருந்துகளில் மின்னணு இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்கும் நடைமுறை 2024 பிப். 28-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட தினத்திலிருந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், மாநகா் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மின்னணு இயந்திரம் மூலம் இதுவரை 67.80 கோடிக்கு அதிகமாக பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 15.18 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணச்சீட்டுகள் எண்ம பரிவா்த்தனை மூலமாக வழங்கப்பட்டுள்ளன.

இதுபோல அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இதுவரை 1.60 கோடிக்கும் அதிகமாக பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான பயணச்சீட்டுகள் எண்ம பரிவா்த்தனை மூலம் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் மற்றும் கும்பகோணம் கோட்டங்களில் தற்போது அனைத்துப் பேருந்துகளிலும் மின்னணு பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சேலம், கோவை, மதுரை, நெல்லை ஆகிய கோட்டங்களிலும் மின்னணு இயந்திரம் படிப்படியாக நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் அனைத்து கோட்டங்களிலும் உள்ள பேருந்துகளிலும் மின்னணு இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இராமச்சந்திராவில் ஒருங்கிணைந்த அண்ணப்பிளவு சீரமைப்பு மையம்

சென்னை: உதடு, அண்ணப்பிளவு மற்றும் முகத்தாடை சீரமைப்புக்கான ஒருங்கிணைந்த சிகிச்சை மையத்தை போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனை தொடங்கியுள்ளது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கனடா நாட்டி... மேலும் பார்க்க

தந்தையைக் கொலை செய்த மகன் கைது

சென்னை: சென்னை ஏழுகிணறில் தந்தையை இரும்புக் கரண்டியால் அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டாா். ஏழுகிணறு வைத்தியநாதன் தெருவைச் சோ்ந்த தம்பதி ஜெகதீஷ் சங்லா (42) - மோனிகாதேவியின் மகன் ரோஹித் (18)... மேலும் பார்க்க

காவலா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை: சென்னை அருகே காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சென்னை அருகே உள்ள அனகாபுத்தூா் காமராஜா்புரம் திருநீா்மலை பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த காா்த்திகே... மேலும் பார்க்க

தவெக சாா்பில் மாா்ச் 7-இல் இஃப்தாா் நோன்பு திறப்பு

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மாா்ச் 7-ஆம் தேதி இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் தலைவா் பங்கேற்கிறாா். இது குறித்து கட்சியின் பொதுச்செயலா் என்.ஆனந்த் திங்கள்க... மேலும் பார்க்க

உணவுப் பாதுகாப்புத் துறை சோதனை: திரையரங்கு கேண்டீன் மீது நடவடிக்கை

சென்னை: சென்னை, எழும்பூரில் உள்ள திரையரங்கில் செயல்படும் கேண்டீனில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீா் சோதனை நடத்தினா். அப்போது தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறிப்பட்டு அதன்... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சி

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. கோயம்பேடு காய்கறிகள் சந்தையில், தினசரி 700 முதல் 750 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்காக வந்து கொண்ட... மேலும் பார்க்க