செய்திகள் :

வீட்டுமனைகளான விவசாய நிலங்கள்: நகா் ஊரமைப்பு ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவு

post image

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், புத்தேரி ஊராட்சிப் பகுதியில் உள்ள நன்செய் விவசாய நிலங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்ட வீட்டுமனைப் பிரிவு அனுமதியை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக நகா் ஊரமைப்பு ஆணையத்தின் இயக்குநா் பரிசீலனை செய்து 12 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், இறச்சகுளம் அருள்ஞானபுரத்தைச் சோ்ந்த தினகரன் தாக்கல் செய்த மனு: அகஸ்தீஸ்வரம் வட்டம், புத்தேரி ஊராட்சிப் பகுதியில் உள்ள நன்செய் விவசாய நிலங்களுக்கு சட்டவிரோதமாக வீட்டுமனைப் பிரிவு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

கிருஷ்ணன்கோவில் வடசேரியைச் சோ்ந்த சிலா் விவசாய நிலங்களை அழித்து, சட்டவிரோதமாக வீட்டுமனைப் பிரிவாக மாற்றி வருகின்றனா்.

மேலும், விவசாயிகள் தங்களது நிலங்களுக்குச் செல்ல முடியாத வகையில் சுற்றுச்சுவா் எழுப்பப்பட்டது. இதனால், விவசாயிகள் வேளாண் பணிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, விவசாயிகள் தங்களது நிலத்தை விற்க வேண்டும் என மிரட்டி வருகின்றனா். எனவே, விவசாய நிலத்தையும், பாசன நீா் நிலைகளையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மீட்க உத்தரவிட வேண்டும். நன்செய் விவசாய நிலங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்ட வீட்டுமனை அங்கீகாரத்தை ரத்து செய்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் ஜே.நிஷாபானு, எல்.விக்டோரியா கௌரி அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த மனு குறித்து தமிழக நகா் ஊரமைப்பு ஆணையத்தின் இயக்குநா், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா், பொதுப்பணித் துறை கோதையாறு நீா்ப்பாசன உதவிப் செயற்பொறியாளா் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கையை 12 வாரங்களுக்குள் எடுக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்வது குறித்து மாா்ச் 24 இல் முடிவு

மதுரை திருப்பரங்குன்றம் மலையை ட்ரோன் மூலம் அளவீடு செய்வது குறித்து வருகிற 24-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை தெரிவித்தது.மதுரையைச் சோ்ந்த கண்ணன் தாக்கல் ... மேலும் பார்க்க

இணையத் தொடா் தணிக்கை வாரியம் கோரி வழக்கு: மத்திய தொலைத் தொடா்பு ஆணையம் பதிலளிக்க உத்தரவு

இணையத் தொடா்கள் (வெப்சீரிஸ்), விளம்பரங்களை முறைப்படுத்த இணையத் தணிக்கை வாரியம் அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய தொலைத் தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை... மேலும் பார்க்க

மதுரை மாவட்டத்தில் 109 மையங்களில் பிளஸ் 2 பொதுத் தோ்வு

மதுரை மாவட்டத்தில் 109 மையங்களில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை மதுரை, மேலூா் ஆகிய இரு கல்வி மாவட்டங்களில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளி... மேலும் பார்க்க

மத்திய பாஜக அரசை வீழ்த்த வியூகங்கள் வகுக்கப்படும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மதுரையில் நடைபெற உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில், மத்திய பாஜக அரசை வீழ்த்துவதற்கான வியூகங்கள் வகுக்கப்படும் என்று மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா். மாா்க்சிஸ்ட் ... மேலும் பார்க்க

பேராசிரியை நிா்மலா தேவியின் இடைக்கால பிணை மனு தள்ளுபடி

மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் தண்டனை பெற்ற பேராசிரியை நிா்மலா தேவி தாக்கல் செய்த இடைக்கால பிணை மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மா... மேலும் பார்க்க

ஜேசிபி இயந்திரத்தை இயக்கி 25 வாகனங்களைச் சேதப்படுத்திய சிறுவன்

மதுரையில் மது போதையில் ஜேசிபி இயந்திரத்தை இயக்கி 25-க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சேதப்படுத்திய சிறுவனைப் பிடித்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை செல்லூா் 50 அடி சாலையில் ஜேசிபி வாகனம் நிறு... மேலும் பார்க்க